வாட்ஸ் அப் நிறுவனம் புதிய பாலிசி கொள்கைகளை வெளியிட்டுள்ளது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இந்த ஆப்பில் அடிக்கடி அப்டேட் கொடுக்கப்படுவது வழக்கம். அதனுடன் Privacy policy-ம் கொடுக்கப்பட்டிருக்கும். பிரைவசி பாலிசியை படிக்காமலேயே பெரும்பாலானோர் உடனடியாக Accept கொடுத்து விட்டார்கள். அந்தவகையில் வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது அதன் பிரைவசி பாலிசியை மாற்றியுள்ளது. இதனை படித்து பார்த்தவர்கள் அனைவரும், இனி வாட்ஸ் அப்பில் நமது தகவல்கள் பாதுகாப்பாக இருப்பது கேள்விக்குறிதானா என கேட்க ஆரம்பித்துவிட்டனர்.
இதில் மேலும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்த பிரைவசி பாலிசியை Accept செய்வதை விட்டால் உங்களுக்கு வேறு வழி இல்லை. இல்லையென்றால் பிப்ரவரி 8ம் தேதிக்கு பிறகு உங்களுடைய வாட்ஸ் அப் கணக்கை பயன்படுத்த முடியாமல் போகும். மீடியா ஃபைல்களை தங்கள் சர்வர்களில் வாட்ஸ் அப் எப்படி ஸ்டோர் செய்யப் போகிறது என்பதையும் இந்த பாலிசி விளக்கியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் அந்நிறுவனம் தகவல்களை ஃபேஸ்புக் உடன் பகிரவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நீங்கள் கணக்கு வைத்திருக்கும் மொபைல் எண், சேவை தொடர்பான தகவல்கள், Mobile device தகவல்கள், IP address உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் அப்பால் சேமித்து வைக்கப்பட்டு பேஸ்புக் நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்யப்படும். உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் மட்டுமே பிரைவசியில் இருக்க வாய்ப்புள்ளது என்பது இதில் தெரிகிறது. முன்னர் இருந்ததை போல Encrypted வடிவில்தான் இந்த தகவல்கள் அனைத்தும் சேமிக்கப்படவிருக்கின்றன. அதேபோல் நீங்கள் ஃபார்வேர்டு செய்யும் மெசேஜ்களையும் வாட்ஸ் அப் கண்காணிக்கவிருக்கிறது. போலி தகவல்கள் பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு முன்னதாக கொடுக்கப்பட்ட அப்டேட்டில், வாட்ஸ் அப் தகவல்களை பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்ய அனுமதி அளிப்பதற்கான ஆப்ஷனை நீங்கள் வேண்டுமென்றால் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் இந்த முறை நீங்கள் Accept செய்வதை விட்டால் வேறு ஆப்ஷன் இல்லை. இந்த பிரைவசி பாலிசிக்கு எதிர்ப்புகள் வர ஆரம்பித்துவிட்டன.
பிப்ரவரி 8 முதல் வாட்ஸ்அப் புது விதிகள் என்ன?
இந்தப் புதிய Privacy Policy ல் இருக்கும் முக்கியமான விதிகள்.
1.WHATSAPP ல் நீங்கள் அனுப்பும் Message யை அந்த நிறுவனம் சேகரித்துக் கொள்ளும்.
அதை FACEBOOK யை சார்ந்துள்ள அவர்களின் நிறுவனத்திற்கு வணிக முறையில் பயன்படுத்திக் கொள்வார்கள்.
(For Ex.) எடுத்துக்காட்டாக
நீங்கள் உங்கள் நண்பருடன் பேசும் செய்தியை (Message) WHATSAPP நிறுவனம் எடுத்து FACEBOOK , INSTAGRAM etc., போன்ற அவர்களின் வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்தும். நீங்கள் பேசியதற்கு சம்பந்தமாக விளம்பரங்களைத் தருவார்கள்.
2.நீங்கள் அனுப்பும் forward messages யை இதுவரை WHATSAPP சேகரிக்கவில்லை. ஆனால் இனிமேல் அந்த forward messages யும் தங்களது சர்வரில் (Server ) சேகரித்துக் கொள்வார்கள்.
3.WHATSAPP ல் இருக்கும் Features (அம்சங்களை ) பயன்படுத்த வேண்டும் என்றால் அவர்களின் Privacy Policy க்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும்.
அவர்கள் நீங்கள் பயன்படுத்தும் Features ல் உள்ள தகவல்களை எடுத்துக் கொள்வார்கள்.
(For Ex.)எடுத்துக்காட்டாக
உங்களுடைய Location யை உங்கள் நண்பருக்கு அனுப்ப வேண்டும் என்றால் நீங்கள் இருக்கும் இடத்தின் தகவல்களையும் WHATSAPP நிறுவனம் சேகரிக்கும்.
Location மட்டும் அல்ல உங்கள் நண்பருக்கு அனுப்பும் Voice message
(குரல் செய்தி )யும் கூட சேகரிப்பார்கள்
4.நீங்கள் அனுப்பும் செய்தி செல்லவில்லை என்றாலோ அல்லது அதை நீக்கி விட்டீர்கள் (Delete) என்றாலோ அந்த செய்தி அங்கு நீக்கப்படாது .
அது WHATSAPP நிறுவனத்தின் Server ல் 30 நாட்கள் சேகரித்து வைக்கப்படும்.
30 நாட்களுக்குப் பின் நீக்கப்படும்.
5.WHATSAPP நிறுவனம் உங்களிடமிருந்து எடுக்கும் தகவல்கள் என்னவென்றால்
நீங்கள் என்ன Mobile பயன்படுத்துகிறீர்கள் மற்றும் அதில் இருக்கும் OS (android or IOS ) என்னவென்றும்
என்ன சிம் பயன்படுத்துகிறீர்கள் அதன் நம்பர்,எவ்வளவு சிக்னல் (signal ) உள்ளது,பேட்டரியின் அளவு நீங்கள் என்ன Browser பயன்படுத்துகிறீர்கள் என்றும் சேகரிப்பார்கள்.
உங்கள் Mobile ன் IP Address,Time Zone, Language போன்ற பல தகவல்களை சேகரிக்க உள்ளனர்.
6. நீங்கள் புதிதாக வந்த WHATSAPP PAYMENT யை பயன்படுத்துகிறீர்கள் என்றால் யாருக்கு நீங்கள் பணம் அனுப்புகிறீர்கள் என்ற தகவல்களையும் சேகரிக்க உள்ளனர்.
நீங்கள் Privacy Policy மற்றும் Terms Of Service ஒப்புதல் (agree) கொடுத்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்கையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அர்த்தம்.
| KALVICHUDAR TABLE | ||||||||||||
| 1-5th | 6-9th | 10th | 12th | |||||||||