மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி
* இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக,
பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து
குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.
எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையையும்
உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்காத வகையில்
கவனமுடன் நடந்து கொள்வேன்.
எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான
அச்சுறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் எந்தவொரு
பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன்.
மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு
கொண்டு செல்வேன்.
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து
அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால்
இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.
குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து
நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.
நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை
உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின்
குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில்
வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை
அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில்
செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.