கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி அடைய செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு 9முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சியடையச் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கேற்ப பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில்10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 11-ம் வகுப்பில் சேருவதற்கேற்ப தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.