t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று 2342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (30-03-2021) - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 March 2021

தமிழகத்தில் இன்று 2342 பேருக்கு கொரோனா தொற்று உறுதி (30-03-2021)

தமிழகத்தில் இன்று (மார்ச்-30) 2,342 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,84,094 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-190) மூலமாக, இன்று மட்டும் 83,154 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 95 லட்சத்து 11 ஆயிரத்து 655 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 1,404 பேர் ஆண்கள், 938 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,33,873 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,50,185 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


JOIN KALVICHUDAR CHANNEL