t> கல்விச்சுடர் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் நாளை வெளியாகிறது - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

21 March 2021

பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பட்டியல் நாளை வெளியாகிறது

தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்புக்கு மே 3 முதல் 21-ந் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் பள்ளிகள் மூலம் சேகரிக்கப்பட்டு தேர்வுத்துறைக்கு அனுப்பப்பட்டன.
அதன் அடிப்படையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை மாநில அளவில் தேர்வுத்துறை தயார் செய்துள்ளது. தற்போது அந்த பட்டியலை சரிபார்த்துக் கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குனரகம் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம் வருமாறு:-
மே மாதம் நடைபெற உள்ள பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கு பதிவு செய்துள்ள மாணவ- மாணவிகளின் பெயர் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை தேர்வுத்துறையின்  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
அதில் இடம்பெற்றுள்ள பெயர்களை சரிபார்த்து கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் உடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் திருத்தங்களை தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL