மே 3ஆம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாட தேர்வு மட்டும் மாற்றம்
தமிழகத்தில் மே3ஆம் தேதி நடைபெறவிருந்த +2 மொழிப்பாட தேர்வு மட்டும் மே 31ஆம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், மறுநாள் தேர்வு நடத்துவது சாத்தியமில்லை. இதனால் முதல் தேர்வு மே 31ஆம் தேதியும், இதர தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலும் நடைபெறும் என அறிவித்துள்ளது.
*மொழிப்பாட தேர்வு மே 31ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
இதர தேர்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த
தேதிகளிலேயே நடைபெறும்:
*சமூக இடைவெளியை பின்பற்றி தேர்வுகள் நடக்கும் - தேர்வுத்துறை இயக்குனர்