தேவையான பொருட்கள்:
முதலில்
தூதுவளை – 100 கிராம்
துளசி - 100 கிராம்
முசுமுசுக்கை - 100 கிராம்
கண்டங்கத்திரி - 100 கிராம்
ஆகிய நான்கையும் நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு இத்துடன்👇
சுக்கு – 10 கிராம்
மிளகு – 10 கிராம்
திப்பிலி – 10 கிராம்
அதிமதுரம் – 10 கிராம்
ஜாதிக்காய் – 10 கிராம்
மாசிக்காய் – 10 கிராம்
ஜாதிப்பத்திரி – 10 கிராம்
ஏலக்காய் – 10 கிராம்
கருஞ்சீரகம் – 10 கிராம்
அக்ரகாரம் – 10 கிராம்
கடுக்காய் – 10 கிராம்
ஆகியவற்றை எடுத்து, சுத்தம் செய்து அனைத்தையும் ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும்.
இதில் இரண்டு கிராம் அளவு பொடியை எடுத்து, தேனில் குழைந்து தினம் காலை, மற்றும் இரவு இருவேளை உணக்குப்பின் சாப்பிட்டு வர, ஆஸ்துமா, மூச்சுத் திணறல், போன்ற நுரையீரல் சார்ந்த கோளாறுகள் அனைத்தும் தீரும்.