t> கல்விச்சுடர் ரவா தேங்காய் உருண்டை செய்வது எப்படி? - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

24 May 2021

ரவா தேங்காய் உருண்டை செய்வது எப்படி?



*தேவையானவை:

 தேங்காய் துருவல் - 1 கப், ரவை - அரை கப், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய் தூள் -1 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

*செய்முறை:* 

ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் ரவையை நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். மீதி இருக்கும் நெய்யில்தேங்காயை நன்கு வறுத்துக்கொள்ளுங்கள். சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து,சர்க்கரை கரைந்து, ‘பிசுக்கு பதம்’ வந்ததும் இறக்குங்கள். (சர்க்கரை கரைந்து கொதித்ததும், ஆள்காட்டிவிரலாலும் கட்டை விரலாலும் பாகைத் தொட்டுத் தேய்த்துப் பார்த்தால், கம்பி பிரிந்து வராமல், பிசுபிசுப்பாய்விரல்களில் ஒட்டும். அதுதான் ‘பிசுக்கு’ பதம்).வறுத்த ரவை மற்றும் தேங்காய் துருவலை பாகில் கொட்டி, ஏலக்காய்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கி சிறு சிறுஉருண்டைகளாகப் பிடித்துவையுங்கள்.


JOIN KALVICHUDAR CHANNEL