t> கல்விச்சுடர் தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

16 June 2021

தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 12 பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குக் கூடுதல் பொறுப்பும், 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பணி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இன்று (ஜூன் 16) வெளியிட்ட உத்தரவு:

1. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மாற்றப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் மாற்றப்பட்டு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

3. சென்னை பெருநகர மாநகராட்சியின் இணை ஆணையர் ஷங்கர் லால் குமாவத் மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

4. பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையின் துணைச் செயலாளர் அம்ரித் மாற்றப்பட்டு, நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

5. நகராட்சி நிர்வாகத் துறையின் இணை ஆணையர் கலைச்செல்வி மோகன் மாற்றப்பட்டு, சர்வே மற்றும் செட்டில்மென்ட் துறையின் கூடுதல் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

6. நாகர்கோவில் மாவட்ட ஊரக வளர்ச்சிக் கழகத்தின் திட்ட அலுவலர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா மாற்றப்பட்டு, வணிகவரித்துறையின் இணை ஆணையராக (கோயம்புத்தூர்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

7. வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் செயலாளர் நிஷாந்த் கிருஷ்ணா மாற்றப்பட்டு, ஓசூர் உதவி ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

8. சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

9. கூட்டுறவுத்துறையின் இணைச் செயலாளர் வளர்மதி மாற்றப்பட்டு, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

10. வருவாய் நிர்வாகத் துறையின் இணை ஆணையர் எம்.லஷ்மி மாற்றப்பட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

11. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் இணை மேலாண் இயக்குநர் கோபால சுந்தரராஜ் மாற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. மகளிர் மேம்பாட்டு வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரகலா மாற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மூவருக்குக் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, சிறப்பு செயலாக்கத்துறையின் முதன்மைச் செயலாளராக விபு நாயரும், சமூக சீர்திருத்தத் துறையின் முதன்மைச் செயலாளராக மங்கத் ராம் சர்மாவும், நில சீர்திருத்தத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக சந்திரகாந்தும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மூவருக்குப் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக கமல் கிஷோரும், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல்துறை மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண் இயக்குநராக ஆகாஷும், தமிழ்நாடு கைடன்ஸ் பீரோவின் (GUIDANCE Bureau) மேலாண் இயக்குநராக சராயுவும் நியமனம் செய்யப்படுள்ளனர்.

JOIN KALVICHUDAR CHANNEL