t> கல்விச்சுடர் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம் - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

13 June 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி மாவட்ட வாரியான விவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.
அதன்படி, தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின்
மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 53 ஆயிரத்து 721 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தினசரி ஆயிரத்திற்கு மேல் குறைந்து கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது 1,49,927 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 25,895 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 74 ஆயிரத்து 247ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 267 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 29
ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மேலும் 935 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

JOIN KALVICHUDAR CHANNEL