t> கல்விச்சுடர் 8 மாவட்டங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

6 June 2021

8 மாவட்டங்களில் கன மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 
தமிழகத்தில் சேலம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம்‌ முதல்‌ வட தமிழ்நாட்டின்‌ கடலோர பகுதி வரை நிலவும்‌ வளிமண்டல சுழற்‌சி காரணமாக இன்று சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, வட தமிழ்நாட்டின்‌ ஏனைய மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ மிதமான மழையும்‌, தென்‌ தமிழ்நாட்டில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

7–ந்தேதி மற்றும் 8–ந்தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

9 மற்றும் 10–ந்தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மமையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான மழை பெய்யக்கூடும்‌.


JOIN KALVICHUDAR CHANNEL