தமிழகத்தின் கோரிக்கை குறித்து அறிக்கை தயாரித்து பிரதமரிடம் வழங்கி உள்ளேன்
அதில் முக்கியமாக,
* கூடுதலான தடுப்பூசிகள் வழங்க வேண்டும்
*குன்னூர், செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தை செயல்பட வைக்க வேண்டும்
*தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
* நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும்
* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும்
* மேகதாது திட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்
*முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்
* காவிரி – குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
* இலங்கை கடற்படையால் தொல்லைக்கு உள்ளாகும் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
* கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும்
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவில் அமைக்க வேண்டும்
*கோவையில் எய்ம்ஸ் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும்
* கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்
*சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவதுதிட்டத்தை அமல்படுத்த வேண்டும்
*சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்
*உலக பல்கலைகளில் தமிழுக்கு இருக்கை அமைக்க வேண்டும்
* சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்தவேண்டும்
* பார்லிமென்ட் மற்றும் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்
* குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என பிரதமரிடம் வைத்துள்ளோம்
கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்ற மத்திய அரசுக்கு தொடர்ந்த அழுத்தம் கொடுப்போம். டில்லியில் உள்ள தமிழ் பத்திரிகைகளும் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


