. -->

Now Online

FLASH NEWS


Wednesday 21 July 2021

டிபி மற்றும் காசநோய் குறித்த இந்த கட்டுகதைகளை இனியும் நம்பாதீங்க...




இந்தியாவில் அதிகமான மக்கள் காசநோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் இங்கு காசநோயின் பரவல் விரைவான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. சரியான சமயத்தில் சிகிச்சையளிக்கப்படவில்லை எனில் காசநோய் ஆபத்தானதாக மாறும். எனவே காசநோய் குறித்து சரியான விழிப்புணர்வை பெற வேண்டியது முக்கியமாகும்.

​காசநோய்

மைக்கோ பாக்டீரியம், காசநோய் பாக்டீரியா ஆகியவை காரணமாக காசநோய் ஏற்படுகிறது. இது நுரையீரலை மட்டுமின்றி உங்கள் மூளை, சிறுநீரகம், குடல் மற்றும் எலும்புகளையும் பாதிக்கிறது. நீண்ட உண்ணாவிரதம், போதிய தூக்கம் இல்லாமை, மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற உணவு பழக்கங்கள் ஆகியவை காசநோயை ஏற்படுத்துகின்றன.

இந்த நோயின் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் நோயை தாமதமாக அறிவதாலும் பலருக்கு மருத்துவரிடம் வருவதற்கு முன்பே நோயின் அபாயம் அதிகமாகி விடுகிறது. இந்தியாவில் மிக நீண்ட காலமாக இருக்க கூடிய ஒரு நோயாக காசநோய் உள்ளது. நமது நாட்டில் மிகவும் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட ஒரு நோய் என காசநோயை கூறலாம்.

ஏனெனில் காசநோய் குறித்து மக்களிடம் பல தவறான கருத்துகள் உள்ளன. எனவே இதில் எவையெல்லாம் கட்டுகதை எவையெல்லாம் உண்மை என்பதை நாம் கண்டறிய வேண்டியது முக்கியமாகும்.

​கட்டுகதை 01:

காசநோய் ஒருவருக்கு நுரையீரலில் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும்.

உண்மை: உண்மையில் காசநோய் பெரும்பாலும் முதலில் நுரையீரலையே தாக்குகிறது. ஆனால் தொடர்ச்சியாக சிறுநீரகம், மூளை மற்றும் முதுகெலும்பு போன்ற பிற உடல் பாகங்களிலும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் அறிகுறிகளில் மாறுபாடுகள் இருக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு முறையும் காசநோய் வெவ்வேறு உறுப்புகளை தாக்குகிறது.

நுரையீரலுக்கு வெளியே ஏற்படும் காசநோயானது கூடுதல் நுரையீரல் காசநோய் எனப்படுகிறது. இப்படியான காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அவருக்கு சிகிச்சையளிக்கப்படாமல் இருந்தால் அது நுரையீரலையும் பாதிக்கிறது. மேலும் இரத்த ஓட்டம் வழியாக இது மற்ற உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது.

​கட்டுகதை 02:

காசநோய் ஒரு மரபணு நோய்

உண்மை: இந்த கூற்று மிகவும் தவறானது ஆகும். காசநோய் ஒரு பரம்பரை நோய் கிடையாது. காசநோய் மரபணுக்களில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மரபணுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நோய்களே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. காசநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது மைக்கோபாக்டீரியம் மற்றும் காசநோய் பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு உடனடி சிகிச்சை தேவை.

​கட்டுகதை 03:

புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு காசநோய் வராது

உண்மை: புகைப்பிடிப்பது என்பது காசநோய்க்கான காரணி அல்ல. காசநோய்க்கு எச்.ஐ.வி, நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற சில நோய் காரணிகள் காரணமாக இருக்கலாம். மேலும் இது நுரையீரலை தவிர மூளை, மூட்டுகள், எலும்புகள், முதுகெலும்பு மற்றும் கண்கள் போன்ற பிற உறுப்புகளையும் பாதிக்கின்றன.

​கட்டுகதை 04:

காசநோயை குணப்படுத்த முடியாது

உண்மை: முதலில் காசநோய்க்கு ஆரம்பகால நோயறிதல் முக்கியமாகும். ஒருவர் சரியான சமயத்தில் மருத்துவரை அணுகினால் காசநோயை எதிர்த்து அவர் போராட மருத்துவர் உதவி செய்ய முடியும். இதனால் காசநோயில் இருந்து குணமாக முடியும். தாமதமான காசநோயை சரி செய்வது என்பது கடினமான விஷயமே.

​கட்டுகதை 05:

பேசிலஸ் கால்மெட்- குய்ரின் (பி.சி.ஜி) தடுப்பூசி எடுத்துக்கொள்வது காசநோயை தடுக்கிறது

உண்மை: பி.சி.ஜி தடுப்பூசியானது குழந்தைகளை கடுமையான காசநோயில் இருந்து பாதுக்காக்கிறது. ஆனால் இது பெரியவர்களை காசநோயில் இருந்து பாதுக்காக்குமா என இன்னமும் தெரியவில்லை.

​கட்டுகதை 06:

நல்ல சுகாதாரமாக இருப்பவர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதில்லை

உண்மை: காசநோய் நமது நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வேறு பல காரணங்களால் ஏற்படுகிறது. இதற்கும் சுகாதாரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம்.

எனவே காசநோய் ஒரு மோசமான நோய் என்பதை இப்போது அனைவரும் அறிந்திருக்க கூடும். இந்த நோயை ஆரம்பத்திலேயே அறிவது மூலம் இதன் கடுமையான தாக்கத்தை தடுப்பதுடன் உடலில் காசநோய் இல்லாமல் செய்ய முடியும். எனவே மக்கள் அனைவரும் காசநோய் குறித்த அறியாமையில் இருந்து வெளி வருவதன் மூலம் இந்தியாவில் காசநோயின் பரவலை தடுக்க முடியும்.