தமிழகத்தில் இன்று மேலும் 1,604 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,53,068 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,604 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,02,489 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,10,59,465 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 918 பேர் ஆண்கள், 686 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,19,824 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,82,627 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,863 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,48,868 ஆக உயர்ந்துள்ளது.
25 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 7 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 18 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்




