தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 1,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றில் இருந்து 2,047 பேர் மீண்டுள்ளனர்.
இன்று கொரோனாவுக்கு 29 பேர் உயிரிழப்பு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “ தமிழகத்தில் மேலும் 1,908- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று 2,047-பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உள்ளது.




