இதையடுத்து இன்று (ஆக.30) வெளியிட்டுள்ள அறிவிப்பு,
* தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் ஊரடங்கு செப்.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
* சனி , ஞாயிறுகளில் அனைத்து கடற்கரைகளிலும், வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் கூட விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது.
* செப்.1 ம் தேதி முதல் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும்.
* விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
* விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று நீ்ர்நிலைகளில் கரைப்பதற்கு அனுமதியில்லை.
* தனியார் தங்கும் விடுதிகள் , பணிக்கு செல்லும் மகளிர் விடுதிகள் செயல்பட அனுமதி.
*
இந்த ஊரடங்கில் தற்போது நடைமுறையில் உள்ள சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் வழிமுறைகளை பொதுமக்கள் தவறாது பின்பற்றி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நோய் தொற்று அறிகுறி இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கோவிட் தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
