தமிழகத்தில் இன்று மேலும் 1,639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழகத்தில் புதிதாக 1,639 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. மாநிலத்தில் புதிதாக 1,639 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 26,32,231 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 1,571 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 25,80,686 பேர் குணமடைந்துள்ளனர்.
27 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 35,146 ஆக உயர்ந்துள்ளது.