தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 23,975 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.
தமிழகத்தில் மேலும் 23,975- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 39 ஆயிரத்து 923- ஆக உயர்ந்துள்ளது. தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 12,484- ஆக உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பைக் கண்டறிய ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 720 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1.42 லட்சமாக உள்ளது. சென்னையில் மேலும் 8,987- கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று 23,989- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.