t> கல்விச்சுடர் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

25 March 2022

பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மானியங்களை பணமாக எடுத்து செலவு செய்வதில் சில திருத்தங்கள் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!



வரவு வைக்கப் பட்ட தொகையில் ஐந்தில் ஒரு பங்குக்கு மிகாமல் அவசர செலவினங்களுக்கு பணமாக எடுத்து செலவு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது.

ரூ 12500 வரவு வைக்கப் பட்டிருந்தால் ரூ 2500 ம்,

ரூ 5000 வரவு வைக்கப் பட்டிருந்தால் ரூ 1000 ம்

பணமாக எடுத்து செலவு செய்யலாம்.

ஒரு காசோலையில் இந்த தொகை எடுக்கும் போது ரூ 1000 க்கு மிகாமல் இருக்க வேண்டும் என கூறப் படுகிறது.

ஆனால் இந்த செலவினத்தை PFMS இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

Vendors க்கு பதில் Self என தேர்வு செய்து, காசோலை எண், தேதி, தொகை, செலவின விவரம், cheque favour of போன்ற தகவல்களை DO Login மூலம் பதிவு செய்து, DA Login மூலம் approval தர வேண்டும்.

Self என்பதால் print payment advice option வராது. ஆனால் செலவுத் தொகை PFMS ல் கழித்து காண்பிக்கும்.

வங்கியில் காசோலை மூலம் பணம் எடுத்து செலவு செய்து அதை EMIS ல் expenditure ல் bill உடன் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.

மார்ச் 31 க்குள் செலவு செய்யப்பட்டு EMIS ல் செலவு விவரம் பதிவு செய்ய வேண்டும்.

26, 27 வங்கி விடுமுறை

28, 29 Bank staff strike என கூறப் படுகிறது.

மார்ச் 30 & 31 இந்த நிதி ஆண்டின் கடைசி வேலை நாட்கள்.

PFMS மூலம் பண பரிவர்த்தனை செய்யும் போது, கடைக்காரரின் வங்கிக் கணக்கில் வரவு வர ஒன்றிரண்டு நாட்கள் ஆகலாம் என்பதால் மார்ச் 25க்குள் PFMS மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்வது நல்லது.

JOIN KALVICHUDAR CHANNEL