t> கல்விச்சுடர் பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.04.22 - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

28 April 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 28.04.22


திருக்குறள் :

பா‌ல் : பொருட் பால், 

இயல் : நட்பியல், 

அதிகாரம் : சூது, 

குறள் : 934

சிறுமை பலசெய்து சீரழக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். 

பொருள் :

 பல துன்பங்களுக்கு ஆளாக்கி, புகழைப் கெடுத்த, வறுமையிலும் ஆழ்த்துவதற்குச் சூதாட்டத்தைப் போன்ற தீமையான செயல் வேறொன்றும் இல்லை.

பழமொழி :
Don't bite more than you can chew.

விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. முயற்சி பயிற்சி இரண்டும் பாதியில் விட மாட்டேன். தொடங்குவதில் இல்லை வெற்றி தொடர் தில் தான். 

2. சாதாரண மாணவனையும் சாதனையாளராக மாற்றுவது முயற்சியும் பயிற்சியுமே

பொன்மொழி :

எல்லாருக்கும் மதிப்பளிப்பதோடு, அவர்களின் வாழ்வில் குறுக்கிடாமல் இருப்பதே சிறந்த நாகரிகம்______பேரா .சாலமன் பாப்பையா

பொது அறிவு :

1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? 

ஞானபீட விருது. 

2. இந்தியாவில் தேசிய ரசாயன பரிசோதனைச் சாலை எங்கு அமைந்துள்ளது? 

பாட்னா.

English words & meanings :

Reel - a round object where we can store the wire or film role, கம்பி, சினிமா பட சுருள் ஆகியவற்றை சுற்றி வைக்க பயன்படும் வட்ட வடிவ பொருள். 

Rift - a crack in the rock, பாறையில் ஏற்படும் பிளவு

கணினி யுகம் :

Page up - Move up one screen at a time. 

Page down - Move down one screen at a time.

நீதிக்கதை

சாதுவின் நற்குணம்

ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் பயணித்த இளைஞர்கள் சிலர் அந்த படகில் பயணம் செய்துகொண்டிருந்த சாது ஒருவரைக் கேலி செய்தனர். விளையாட்டு அளவுக்கு மீறியதால் சாது எச்சரிக்கும் நோக்கில் பார்த்தார். இதைக் கண்ட இளைஞன் ஒருவன் கோபமாக உழைக்கப் பயந்த சோம்பேறி மனிதனான உனக்கு எதற்கு கோபம்? என்று சொல்லி அடிப்பதற்கு வந்தான். சாதுவின் கண்கள் கலங்கின.

அப்போது வானில் அசரீரி கேட்டது, என் அருமை சாதுவே! நீ கட்டளையிட்டால் இந்த படகையே கவிழ்த்து விடுவேன்! என்றது அசரீரீ. இதைக் கேட்டதும் இளைஞர்கள் வாயடைத்து போயினர். ஆனால் சாதுவோ, இளைஞர்களே கவலைப்படாதீர்கள். அசரீரி சொன்னது போல, நான் எதுவும் நடக்க விடமாட்டேன் என்று சொல்லி ஆறுதல் அளித்தார்.

பிறகு கைகளை குவித்து, கடவுளே எல்லோரையும் காப்பாற்ற வேண்டிய நீயா இப்படி கேட்பது? ஏதும் செய்வதாக இருந்தால் இவர்களின் புத்தியை நல்வழிப்படுத்து. படகைக் கவிழ்த்து விடுவதால் யாருக்கும் பயன் இல்லை! என்று பிரார்த்தித்து வேண்டினார்.

அப்போது வானில் மீண்டும் அசரீரி ஒலித்தது. சாதுவே! மிக்க மகிழ்ச்சி. உன்னைச் சோதிக்கவே அப்படி சொன்னேன். உன் நல்ல உள்ளத்தை மற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? உனக்கு எப்போதும் என் அருள் உண்டு. இது போன்ற செயலில் ஈடுபடாத நல்ல புத்தியை இவர்களுக்கு அளித்தேன் என்றது. சாதுக்களுக்கு கடவுளின் கருணை எப்போதும் உண்டு என்பதை உணர்ந்த இளைஞர்கள் திருந்தி வாழத் துவங்கினர்.

நீதி :
ஒருவரையும் ஏளனமாக பேசக்கூடாது.

இன்றைய செய்திகள்

28.04.22

💢மணிமண்டபங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வசதி: செய்தி, அச்சு துறையின் 22 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

💢அரசு சட்டக் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு: தமிழக சட்டத்துறையின் அறிவிப்பு.

 💢பேரறிவாளன் விடுதலை விவகாரம் கவர்னர் தனிப்பட்ட முடிவு எடுக்க அதிகாரமில்லை: சுப்ரீம் கோர்ட் உறுதி.

💢தொடர்ந்து உயரும் வெப்பநிலையால் டெல்லிக்கு மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் அறிவிப்பு.

 💢கிழக்கு உக்ரைன் நகரங்களை நோக்கி நகரும் ரஷிய துருப்புக்கள்.

💢ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

 💢Facility for students preparing for competitive examinations in the halls: 22 announcements from the Department of News and Printing.

 💢Masters Degree in Government Law Colleges: 8 Important Announcements of the Tamil Nadu Law Department.

   💢The Supreme Court has no jurisdiction over the personal decision of the Governor on the issue of the release of Perarivalan.

 💢Yellow Alert for Delhi due to continuous rising temperatures - Weather Center announcement.

 💢 Russian troops moving towards cities in eastern Ukraine.

 💢Asian Badminton Tournament: Indian pair advance to 2nd round.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

JOIN KALVICHUDAR CHANNEL