தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டுக்காக ஜூன் 20ம் தேதி அல்லது அதற்கு அடுத்த வாரம் (27ம் தேதி) பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10,300க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டும் பணிகள் நடந்து வருவதால், பள்ளித் திறப்பு தள்ளிப்போனதாக விளக்கமளித்துள்ளார். ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கூடுதலாக 2 வாரம் விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.