ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இது ஒரு தாயின் அசைக்க முடியாத அன்பு, தியாகம் மற்றும் தன் குழந்தைக்கான அக்கறையின் கொண்டாட்டம். இந்த ஆண்டு மே 8 ஆம் தேதி அன்னையர்களுக்கான சிறப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
அவளுடைய அபரிமிதமான அறிவைக் கொண்டு, உன்னைக் காக்கிறாள், உன்னை நேசிக்கிறாள், உன்னை ஒரு திறமையான மனிதனாக வடிவமைக்கிறாள். அவள் இல்லாமல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? இது சாத்தியமற்றது போல் தெரிகிறது. இதன் விளைவாக, அன்னையர் தினம் அவர்கள் ஒவ்வொரு நாளும் மற்றும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் செய்த அனைத்து தியாகங்களையும் அங்கீகரிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
அன்னையர் தினம் 2022: வரலாறு
அன்னையர் தினத்தின் முதல் கொண்டாட்டம் 1908 ஆம் ஆண்டில் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள கிராஃப்டனில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ மெதடிஸ்ட் தேவாலயத்தில் அன்னா ஜார்விஸ் என்ற பெண் தனது தாயாருக்கு நினைவுச் சின்னத்தை ஏற்பாடு செய்தபோது நடந்தது. அவரது தாயார் ஆன் ரீவ்ஸ் ஜார்விஸ் 1905 இல் இறந்தபோது, அமெரிக்காவில் அன்னையர் தினத்தை விடுமுறை தினமாக அங்கீகரிக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அந்த நாளை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோள் முதலில் நிராகரிக்கப்பட்டது, 1911 வாக்கில், அமெரிக்கா முழுவதும் உள்ள மாநிலங்கள் தங்கள் தாய்மார்களை கௌரவிப்பதற்காக விடுமுறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கின.
அன்னையர் தினம் 2022: முக்கியத்துவம்
"வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் மனித குலத்திற்கு அவர் ஆற்றிவரும் ஈடு இணையற்ற சேவைக்காக, அன்னையர் தினத்தை நினைவுகூரும் வகையில், எப்போதாவது, யாரேனும் ஒருவர் நினைவுகூருவார்கள் என்று நான் நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன்," என்று அன்னா ஜார்விஸ் 1876 பதிவு செய்தார்
1941 ஆம் ஆண்டில், உட்ரோ வில்சன், தாய்மார்களின் நினைவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை தேசிய விடுமுறையாக அறிவிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். அன்று முதல் இன்று வரை, மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. எனவே, நீங்களும் உங்கள் அன்னையை கௌரவிக்க மறவாதீர்கள்.
ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் மே 2 ஞாயிற்றுக் கிழமை அன்னையர் தினமாகக் கொண்டாடினாலும், பிரிட்டனில் ஈஸ்டர் திருநாளில் இருந்து மூன்று வராங்களுக்கு முன்பு வரும் ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுகின்றனர்.
அன்னையர் தினம்: போற்றுவோம் வாருங்கள் அன்னையை!!
அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.
அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.
அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
அம்மாவுக்கு அம்மா என்ற ஒரு ரோல் மட்டும் இல்லை. பெற்றோருக்கு மகளாக, ஒருவருக்கு மனைவியாக, அம்மா என்ற அருமையான அந்தஸ்தை அடைந்து, பணிகளை சுமந்து, வேலைக்கு சென்று, குடும்ப பாரத்தை பகிர்ந்து, கஷ்டம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், அமைதியாக அன்புடன் சிரித்து நடந்து கொள்ளும் பாங்கு. இத்தனையும் அம்மா என்ற அந்த உயிருக்குள் மட்டுமே காண முடியும்.
பரிசு கொடுங்கள்...
அந்த அன்னையைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று அன்னையர் தினம். இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை குளிர்விக்க, ஆச்சரியப்படுத்த, அன்று ஒரு நாளாவது அவளை அமர வைத்து ஓய்வு கொடுத்து, பரிசுகள் கொடுத்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் வாசித்து, அவளுடன் பொழுதை போக்க நீங்கள் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.


