. -->

Now Online

FLASH NEWS


Tuesday 2 August 2022

6 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

1.ஈரோடு மாவட்டம் , சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு தினம் ஆடித்திங்கள் 18 - ம் நாளான 03.08.2022 புதன்கிழமை அனுசரிக்கப்படுவதால் , ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

2.ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு  நாளை ( 03.08.2022 ) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

3. ஆடி -18 ம் நாளான 03.08.2022 - ம் தேதியன்று தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது . இதனை ஈடுகட்டும் வகையில் 27.08.2022 ( சனிக்கிழமையன்று ) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது

4.ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை ( 03.08.2022 ) விடுமுறை.

5. சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆக.3ம் தேதி சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

6. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை