கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அழைத்து செல்ல முடியாத சூழலில், இந்தாண்டு சண்டிகர், சிம்லா, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு 40 மாணவர்கள், 10 மாணவிகள் என மொத்தம் 50 மாணவர்கள் புறப்பட்டு சென்றனர்.
பெரம்பூர் ரெயில் நிலையத்திலிருந்து சுற்றுலா சென்ற அவர்களை மேயர் பிரியா, இனிப்புகள், உணவுகள், உள்ளிட்டவைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தார்.