மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்த அனுமதியளித்திருக்கிறது மத்திய அமைச்சரவை.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அது தற்போது 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.