. -->

Now Online

FLASH NEWS


Tuesday 2 April 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.04.2024




திருக்குறள்:

"பால்: பொருட்பால். இயல்: அரசியல். 
அதிகாரம்: இறைமாட்சி.

குறள்:388

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.

விளக்கம்:

நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

பழமொழி :
Small rudders guide great ships

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது


இரண்டொழுக்க பண்புகள் :

 1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்.
பொன்மொழி :

பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.

பொது அறிவு : 

1. பண்டைய சோழர்களின் சின்னம் எது?


விடை: புலி 

2 ”ஓடி கூடி” இச்சொற்களில் அமைந்துள்ள யாப்பிலக்கணம்?

விடை: எதுகை 
English words & meanings :

 Debut(n) - first public appearance as a performer அரங்கேற்றம்
Decency(n) - respectable behaviour
நல்லொழுக்கமுள்ள நடத்தை
ஆரோக்ய வாழ்வு : 

பருப்புகீரை:
பருப்புக் கீரையை நன்கு அரைத்து அக்கி வந்த இடங்களில் மேல்பூச்சாகத் தடவி வந்தால், கொப்புலங்கள்மறைந்து உடல் குளுமையடையும்.

நீதிக்கதை

 .நரியும் ஆடும்



வயதான நரி ஒன்று ஒரு நாள் இரை தேடி வெகு நேரம் காட்டில் அலைந்தது. இரை எதுவும் கிடைக்காததால் பசியால் மிகச் சோர்வுற்று களைப்புடன் தள்ளாடி நடந்து சென்றது, வழியில் பெரிய பாழுங்கிணறு ஒன்று இருந்தது. அதற்குக் கைபிடிச் சுவர் இல்லாததால் தள்ளாடி நடந்து சென்ற நரி தவறி கிணற்றினுள் விழுந்து விட்டது.



கிணறு வெகு ஆழமாக இருந்ததால் பலவாறு முயன்றும் நரியால் தப்பி வெளியே வர முடியவில்லை. அதனால் அயர்வுற்றது.அதற்கு ஆடு ஆசையுடன் "நானும் அங்கு வரலாமா? நாம் இருவரும் சேர்ந்து புல் தின்னலாமா?" என்று கேட்டது. நரி, "இங்கு நிறையப் புல் இருப்பதால் நாம் இருவரும் புசிக்கலாம் தாங்கள் இங்கே இறங்கி வாருங்கள்" என்றது.



ஆடு சிறிதும் யோசிக்காமல் கிணற்றினுள் குதித்தது. சமயம் எதிர்பார்த்திருந்த நரி ஆட்டின் தலையின் மேல் காலை வைத்துத் தாவி வெளியே குதித்துத் தப்பி ஓடியது.



ஆடு, நரியின் செயலைக் கண்டு திகைத்து அச்சமுற்றது. பல முறை முயன்றும் அதனால் வெளியே வர முடியவில்லை. தனது அறியாமையை நினைத்து வருந்தியது.



பொழுது கடந்து வெகுநேரம் ஆகியும் ஆட்டைக் காணாத குடியானவன் அதைத் தேடி அலைந்தான். தற்செயலாய் அக் கிணற்றினருகில் வந்து எட்டிப் பார்த்தான். தனது ஆட்டைக் கண்டான். உடனே கிணற்றில் இறங்கி ஆட்டை வெளியேற்றினான். தப்பிய ஆடு குடியானவனுடன் வீடு திரும்பியது.



யார் எதை சொன்னாலும் யோசித்து செயல்பட வேண்டும்.

இன்றைய செய்திகள்

02.04.2024


*சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி மூலம் ரூபாய் 1800 கோடி கிடைத்தது.

*தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 7.4 பில்லியன் டாலராக உயர்வு; முதல்வர் மு க ஸ்டாலின்.

*கோடை வெயில் கொளுத்துவதால் சென்னையில் கண் நோய் பாதிப்பு அதிகரிப்பு.

*தமிழகம் முழுவதும் 83 மையங்களில் +2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கியது.

*டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட் புதிய சாதனை படைத்த எம்எஸ் தோனி; விராட் கோலி சாதனையை முறியடித்த தோனி.

Today's Headlines

*Chennai Corporation got Rs 1800 crore through property tax.

 *Tamil Nadu's electronics exports rise to $7.4 billion; CM Stalin.

 * Increase of 'eye disease' in Chennai due to scorching heat.

 *Correction of +2 answer sheet started today in 83 centers across Tamil Nadu.

 *MS Dhoni made a new record by taken 300 wickets in T20 cricket;
 Dhoni broke Virat Kohli's record.
 Prepared by

Covai women ICT_போதிமரம்