t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

18 August 2025

ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான இணைப்பு


ஆகஸ்ட் 2025 மாத சிறார் திரைப்படம் The White Balloon திரைப்படம் & திரைப்பட விளக்கத்திற்கான இணைப்பு


Thanks To 
பெ. அலெக்ஸ் பாண்டியன்,
BRTE, BRC - சேடபட்டி,

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -18.08.2025




திருக்குறள்: 

குறள் 342: 

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டியற் பால பல. 

விளக்க உரை: 

ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும் போதே அவற்றைக் துறந்து விடுவானேயானால், அவன் உலகில் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

பழமொழி :
Time is your greatest asset. 

நேரமே உன்னுடைய மிகப்பெரிய சொத்து.

இரண்டொழுக்க பண்புகள் :

1. நல்ல புத்தகம் நல்ல நண்பனுக்கு சமம்.


2. எனவே நல்ல புத்தகங்களை தேடிப் படிப்பேன்.

பொன்மொழி :

எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே;  யாரையும் ஒதுக்காதே ; உன் பணியை ஊக்கத்துடன் செய்! - அரவிந்தர்

பொது அறிவு : 

01.தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் நகரம் எது?


மதுரை(Madurai)

02. இந்திய தொல்லியல் துறை எந்த நில அளவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது?

அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
Alexander Cunningham
English words :

spotlight – a single ray of bright light onto a small area; the centre of public attention or interest.வட்டொளி தெறிவிளக்கு; மக்கள் கவன அல்லது ஆர்வ மையம்.

Grammar Tips: 

 When a one-syllable word ends with S, L, F, Z, double the last letter 
Ex: CliFF, beLL, graSS, buZZ

Don't forget it should be a single syllable

More Examples

sniFF, oFF, 

spiLL, duLL

dreSS, boSS

fuZZ, friZZ

அறிவியல் களஞ்சியம் :

 ஒரு மனிதனின் 25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையவும் தொடங்கும். 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். இது குறுத்தெலும் புகள் காய்ந்து போவதால் தான் நேர்கிறது. நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள்.

ஆகஸ்ட் 18

நேதாஜி அவர்களின் நினைவுநாள்

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். 

விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
நீதிக்கதை

 சிட்டுக்குருவியின் ஆசை

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. 

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. 

நீதி :
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.

இன்றைய செய்திகள்

18.08.2025

⭐தமிழகத்தில் நாளை முதல் 38 ரெயில் நிலையங்களில் ரெயில்கள் நின்று செல்லும்- மத்திய மந்திரி எல்.முருகன் தகவல்

⭐கார், பைக்குகள் மீதான GST வரியை குறைக்க மத்திய அரசு முடிவு விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு

⭐தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

⭐ஆபரேஷன் சிந்தூரில் 13 ராணுவ வீரர்கள் பலி.. 3 மாதங்களுக்கு பிறகு ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது.

🏀பாலியல் குற்றச்சாட்டு: கிரிக்கெட் வீரர் யாஷ் தயாளுக்கு தடை உ.பி. லீக் போட்டியில் ஆட முடியாது.


Today's Headlines

⭐Union Minister  L. Murugan has informed that the southern trains will stop at 38 railway stations in Tamil Nadu from tomorrow onwards. 

⭐ The central government decided to reduce GST on cars and bikes, so prices are likely to come down significantly.

⭐M.K.Stalin has announced various new projects for the Dharmapuri district 

⭐13 soldiers killed in Operation Sindoor.. Pakistan openly admits after 3 months.
 SPORTS NEWS 

🏀 Pakistan's squad for the Asia Cup T20 series has been announced. In Group A, India will face Pakistan in Dubai on the 14th. 

🏀Sexual allegation: Cricketer Yash Dayal banned from playing in the UP league.


16 August 2025

TOP 50 TENSES RULES


கலைத் திருவிழா போட்டிகள் -2025-26

கலைத் திருவிழா போட்டிகள் -2025-26
***************************

🌸 குறுவள மையம், வட்டாரம் & மாவட்ட அளவில் போட்டிகள் நடத்துவதற்கு தேவையான அனைத்து படிவங்களும் ஒரே தொகுப்பாக ( Exel & Word File ) வழங்கப்பட்டுள்ளது.

🔅 Attendance 
🔅 Student Registration Format 
🔅 Judge Format 
🔅 Winners Format
🔅 Badges and Token Sheet
🔅 How to Token No.
🔅 EB & Police Station Letter
🔅 CRC level Committee Format
🔅 Teams Format 
🔅 Model Date Schedule
🔅 Judge Model Certificate 
🔅Baamini Font

15 August 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -15.08.2025

திருக்குறள்: 

குறள் 215: 

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
பேரறி வாளன் திரு.     

விளக்கம்: 

பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.

பழமொழி :
Face fear with action. 

பயத்தை செயலால் எதிர்கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.


2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.

பொன்மொழி :

என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் நான் சோர்ந்து போக மாட்டேன் ஏனென்றால் நான் 100 வெற்றிகளைப் பார்த்தவன் அல்ல . ஆயிரம் தோல்விகளை பார்த்தவன். 

- தாமஸ் ஆல்வா எடிசன்

பொது அறிவு : 

01."சுதந்திரம் எனது பிறப்புரிமை" என்று முழங்கியவர் யார்?


பால கங்காதர திலகர்
Bal Gangadhar Tilak

02."இந்தியாவின் கிராண்ட் ஓல்ட் மேன்" (Grand old man of India)என்று அழைக்கப்பட்டவர் யார்?

தாதாபாய் நௌரோஜி
Dadabai Naoroji
English words :

revival –the act of becoming or making something strong or popular again.புத்தெழுச்சி. மறக்கப்பட்ட ஒன்று மீண்டும் வலிமை பெறுதல்

Grammar Tips: 

Tips to write Your and You're without confusion 
Your vs. You're:
"Your" is possessive 
e.g., "your book" is on the table. "You're" is a contraction of "you are". 
Ex: I hope you're also coming to the independence day function 
அறிவியல் களஞ்சியம் :

 மூளையின் அடிப் பகுதியில் இருக்கும் பிட்யூட்டரி சுரப்பி தான் உடல் வளர்ச்சியையும், பாலின தன்மையையும் கட்டுப்படுத்துகிறது. ஒரு சிறு பட்டாணி அளவே உள்ள இது, உடலின் பல்வேறு பகுதிகளுடன் 50 ஆயிரம் நரம்புகளால் தொடர்பு கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 15

இந்திய விடுதலை நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி விடுதலை நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.
நீதிக்கதை

 உருவத்தை பார்த்து பழகாதே



ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.



அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...



ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.



உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.



மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.

இன்றைய செய்திகள்

15.08.2025

⭐ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு காரணமாக பயங்கர நிலச்சரிவு 12 பேர் உயிரிழப்பு

⭐ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்.3ல்
தமிழகம் வருகை: மத்திய பல்கலை விழாவில் பங்கேற்கிறார்

⭐உச்சநீதிமன்ற உத்தரவுப்படி புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது.

⭐ தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀அமெரிக்காவின் பைன்ஹர்ஸ்டில் நடைபெற்ற மதிப்புமிக்க அமெரிக்க கிட்ஸ் உலக சாம்பியன்ஷிப்பில், பெங்களூருவைச் சேர்ந்த 9 வயது வேதிகா பன்சாலி, பெண்கள் 9 பிரிவில் வெற்றி பெற்று, முதல் இந்திய வீராங்கனையானார்.

Today's Headlines

*TODAY'S HEADLINES* 

⭐In Jammu and Kashmir, Massive landslide due to cloudburst and 12 people were died  

⭐President Draupadi Murmu to visit Tamil Nadu on September 3: Participates in Central University function .

⭐700 stray dogs have been caught near Red Fort in New Delhi as per the Supreme Court order.

⭐The Madurai bench of the High Court has ordered the removal of flexboards and banners placed in public places without permission across the Tamil Nadu.

 *SPORTS NEWS* 

🏀At the prestigious US Kids World Championships held in Pinehurst, USA, 9-year-old Vedika Bhansali from Bengaluru became the first Indian player to won the women's 9 category.


14 August 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -14.08.2025


திருக்குறள்: 

குறள் 355: 

எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள் 
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 

விளக்க உரை: 

எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத்தோற்றத்தை மட்டும் கண்டுமங்காமல்) அப் பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வு.

பழமொழி :
Try,fail,learn,repeat. 

முயற்சி செய்,தோல்வியுறு, கற்றுக்கொள், மீண்டும் முயற்சி செய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.


2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.

பொன்மொழி :

பயிர் செய்யும் போது ஒருவன் தனியாக உழைக்கிறான். ஆனால் அதனை அறுவடை செய்யும் போது அனைவரும் கூட்டாக பயன்படுத்துகின்றனர் . -வாரியார்

பொது அறிவு : 

01.உலக விலங்குகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?


அக்டோபர் 4 (October 4)

02. தாஜ்மஹால் எந்த வகையான மார்பில்( Marble) கற்களால் கட்டப்பட்டுள்ளது?

மக்ரானா (Makrana marble )
English words :

archive –a collection of historical documents or records gives information about a place or group of people:ஒரு குறிப்பிட்ட நபர்கள், நிறுவனங்கள் அல்லது சமூகத்தின் ஆவணங்கள் சேமித்து வைக்க படும் இடம், ஆவண காப்பகம்.

Grammar Tips: 

 "Its" and "it's" are commonly confused now. Let us see where and when to use them

It's
Contraction: "It's" is a shortened form of "it is" or "it has".
 
Example: "It's a beautiful day." (It is a beautiful day)

Its
Possessive: "Its" indicates possession or belonging, similar to "his" or "her." It does not use an apostrophe for this purpose. 
Example: "The dog wagged its tail."

அறிவியல் களஞ்சியம் :

 இதயம் 24 மணிநேரத்தில் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே பரவச்செய்கிறது. இது உண்டாகும் சக்தி 80 ஆயிரம் கிலோ எடை உள்ள பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.

ஆகஸ்ட் 14

பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினம்
நீதிக்கதை

 பஞ்சவர்ண கிளி



நீண்ட காலத்திற்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. 



அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. 

ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி, அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லோரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லோரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லோரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. 



அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். 

நீதி :
பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

14.08.2025

⭐தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

⭐ சென்னையில் துப்புரவுப் பணியாளர்களின் போராட்டங்கள் போராட்டத்தால், பணியாளர்கள் பணிக்கு வராத மண்டலங்களில் கடந்த 12 நாட்களாக தேங்கியிருந்த 24,000 டன் குப்பைகளை 1000 தற்காலிக ஊழியர்களைப் பணியமர்த்தி அகற்றப்பட்டுள்ளது.

⭐தமிழ்நாட்டுக்கு ரூ.2291 கோடி கல்வி நிதி நிலுவை விவகாரம் குறித்து ஒன்றிய அரசு செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் 3000 மீட்டர் தேசிய சாதனையை முறியடித்தார்

🏀 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இந்தியாவின் முயற்சியை IOA அங்கீகரித்துள்ளது.


Today's Headlines

⭐ The President of India, Honorable Draupadi Murmu, will soon participate in the convocation ceremony of Tamil Nadu Central University.

⭐ 24,000 tons of garbage had been piling up in the zones where the sanitation workers were not present for work for the past 12 days, due to the sanitation workers' protests in Chennai have been removed by hiring 1,000 temporary workers.

⭐Supreme Court summons to Union Government Secretary regarding the issue of Rs 2291 crore education fund arrears for Tamil Nadu.

 SPORTS NEWS 

🏀Indian athlete Gulvir Singh breaks 3000m national record.

🏀 IOA recognises India's bid to host 2030 Commonwealth Games.



13 August 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -13.08.2025




திருக்குறள்: 

குறள் 351: 

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு 

விளக்க உரை: 

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

பழமொழி :
Keep going, even when it's hard. 

கடினமாக இருந்தாலும்,தொடர்ந்தால் வெற்றி உனதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1.உண்மை பேசுவதே உயர்ந்த பண்பு.


2.எனவே எப்போதும் உண்மையை மட்டுமே பேசுவேன்.

பொன்மொழி :

வாழு! வாழ விடு! ஏனெனில் வாழ்க்கையின் நியதி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் சகிப்புத்தன்மையுமே ஆகும் - மகாத்மா காந்தி.

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் யார்?


நாமக்கல் கவிஞர்.
வெ.இராமலிங்கம் பிள்ளை
(Nammakal V. Ramalingam pillai)

02. அதிக நாடுகளைக் கொண்ட கண்டம் எது?

ஆப்பிரிக்கா-54 நாடுகள்
(Africa 54- Countries)
English words :

gangway - a bridge that people use for getting on or off a ship.கப்பலில் ஏற அல்லது இறங்கப் பயன்படுத்தப்படும் பாலம் போன்ற அமைப்பு

Grammar Tips: 

Preposition continuation 

Today, we will see where to use On/In 

On- before day, mode of transport, position 

Ex –On Monday 
On a bicycle, 
On the ground 

In – week/ month/ year
Season 
State of condition 

Ex: In 2024
      In January 
      In summer 
      In good health

அறிவியல் களஞ்சியம் :

 மனித உடலில் 60 சதவிதம் நீர் தான் உள்ளது. இது சுமார் 50 லிட்டர் இருக்கும். அதாவது நூறு கிலோ மனிதனின் உடலில் 60 லிட்டர் தண்ணீர் தான் இருக்கிறது.

ஆகஸ்ட் 13

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் பிறந்தநாள் 

பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்

பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள் (International Lefthanders Day) என்பது இடது கை பழக்கம் உள்ளவர்களின் தனித்துவம் மற்றும் வேறுபாடுகளைக் கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று அனுசரிக்கப்படும் பன்னாட்டு தினமாகும். 1976 முதல் "பன்னாட்டு இடக்கை பழக்கத்தவரின் நிறுவனத்தின்" நிறுவனர் ஆர். கேம்ப்பெல் என்பவரால் கொண்டாடப்பட்டது.

நீதிக்கதை

 கழுகின் நன்றியுணர்ச்சியும், நரியும்



ஒரு நாள் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றிருந்தான். அவன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக்கொண்டது. அந்த கழுகின் சிறகுகளை மட்டும் வெட்டி சங்கிலியால் கட்டிப் போட்டான். அவ்வழியே சென்ற ஒருவர், கழுகின் மீது இரக்கப்பட்டு வேடனிடம் காசு கொடுத்து அந்தக் கழுகை வாங்கி, தன் வீட்டில் அன்புடன் வளர்த்தார். 

இறக்கைகள் நன்கு வளர்ந்தது, பின் அதைப் பறக்க செய்தார். கழுகு பறந்து செல்லும் போது ஒரு முயலைப் பார்த்தது. அதை தூக்கி வந்து தன்னை வளர்த்தவரிடம் காணிக்கையாகக் கொடுத்தது. 

இதைப் பார்த்த நரி, உன்னைப் பிடித்த வேடன் மறுபடியும் பிடிக்க வரலாம், நீ இந்த முயலை அவனிடம் கொடுத்திருந்தால், மறுபடியும் அவன் உன்னைப் பிடிக்காமல் இருப்பான். எதற்காக அவரிடம் கொடுத்தாய் என கழுகிடம் கேட்டது. 

இல்லை நீ சொல்வது தவறு. வேடனிடம் நான் முயலைக் கொடுத்தாலும், பிற்காலத்தில் அவன் என்னை பிடிக்காமல் இருக்கபோவதில்லை, ஆனால் நான் ஆபத்தில் இருந்தபோது என்னைப் காப்பாற்றியவருக்கு என் நன்றியையும், விசுவாசத்தையும் தெரிவிக்கவே முயலைக் காணிக்கையாகச் கொடுத்தேன் எனப் பதில் கூறியது கழுகு. 



நீதி :

உதவி செய்தவரிடம் நன்றியோடு இருப்பது தான் பண்புள்ள செயல்.

இன்றைய செய்திகள்

13.08.2025

⭐வருகிற 7-ந்தேதி முழு சந்திர கிரகணம்: சென்னையில் முழுமையாக தெரியும்

⭐சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானைகள் எண்ணிக்கை 780 ஆக உயர்வு-அதிகாரி தகவல்

⭐கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: விலைப்பட்டியலை சமர்ப்பித்த டெல், ஏசர்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀இரண்டு ஜப்பானிய குத்துச்சண்டை வீரர்கள் -ஷிகெடோஷி கோட்டாரி மற்றும் ஹிரோமாசா உரகாவா -பரிதாபமாக இறந்தனர்.

🏀41 பந்தில் சதம் விளாசிய டெவால்ட் ப்ரீவிஸ்: பொன்னான வாய்ப்பை தவற விட்ட ஐபிஎல் அணிகள்- டி வில்லியர்ஸ்


Today's Headlines

⭐Total lunar eclipse fully visible in Chennai on the 7th September.

⭐Official information about Elephants in the Sathyamangalam Tiger Reserve areas has increased to 780 

⭐Dell and Acer have submitted the quotation for laptops, which will be provided to college students.

 SPORTS NEWS 

🏀Two Japanese boxers - Shigetoshi Kotari and Hiromasa Uragawa - died tragically. 

🏀Dewald Brevis hits 41-ball century in IPL teams that missed a golden opportunity - de Villiers

JOIN KALVICHUDAR CHANNEL