t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

30 September 2025

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது ககன் தீப் சிங் பேடி குழு



ஓய்வூதிய திட்டம் குறித்து தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்த ககன் தீப் சிங் பேடி குழு


பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களின் தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 2025-இல் அரசு அமைத்தது.

பின்னர், உரிய அறிக்கையினை செப்டம்பர் 2025-க்குள் அரசிற்கு அளித்திட இக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது.

மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.

கடந்த எட்டு மாதங்களில், 7.36 லட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது.

கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழிநுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.

சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இச்சூழ்நிலையில், இக்குழுவானது இன்று (30.09.2025) ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. மேற்கூறிய கலந்தாய்வுகளை மேற்கொண்ட பின்னர், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசிற்கு சமர்ப்பிக்கும்.








29 September 2025

26 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.09.2025




திருக்குறள்:

அதிகாரம்:கள்ளாமை

திருக்குறள்:286

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம்:

பிறர் பொருளைக் கவர்வதில் மிகுந்த விருப்பமுடையவர், அளவறிந்து வாழும் நெறியில் நின்று வாழமாட்டார்.

25 September 2025

களஞ்சியம் Kalanjiyam App New Update-1.22.5


களஞ்சியம் Kalanjiyam App New Update-1.22.5

👉 Employee Bank details Implemented.

👉 Surrender Leave Module Implemented.

👉 Performance Enhancement.

👉 Minor Bug Fixes.

App Update செய்ய Direct link

👇👇👇👇👇👇👇

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2025




திருக்குறள்:

குறள் 515: 

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான் 
சிறந்தானென் றேவற்பாற் றன்று. 

விளக்க உரை: 

(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

பழமொழி :
A single kind word can change someone's entire day. 

ஒரு இனிய சொல் ஒருவரின் முழு நாளையே மாற்றிவிடும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாப்பேன்.

2.என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.

பொன்மொழி :

சிறந்த எண்ணம் கீழான எண்ணத்தை அடக்கும்போது ஒரு மனிதன் தனக்குத்தானே தலைவனாகிறான் - சாக்ரடீஸ்

பொது அறிவு : 

01.தமிழகத்தின் ஏலக்காய் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் எது?


போடிநாயக்கனூர்- தேனி மாவட்டம்
Bodinayakanur -Theni District

02.FIDE உலக சதுரங்கப் போட்டி 2025 எந்த நாட்டில் நடைபெற உள்ளது?

கோவா- இந்தியா
Goa- India
English words :

Take on –accept a task. ஒரு பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல்

Grammar Tips: 

 "Into" vs "in to"
“Into” is a preposition that means "to the inside" of something.
As per rules prepositions describe the relationship between a noun or pronoun and another word.
Ex: We walk into a restaurant 

We use “in to” when either the word “in” or the word “to” is part of a verbal phrase.
Ex: “Let's check in to the hotel before we go out.”
“Jessie stopped in to pick up lunch.”

அறிவியல் களஞ்சியம் :

 கடலுக்கு அடியில் தனிமங்கள்

மெக்சிகோவின் மேற்கு -- அமெரிக்காவின் ஹவாய் இடையே உள்ள கடல் பகுதியில் 13,123 அடி ஆழத்தில் நிக்கல், மாங்கனீசு, காப்பர், ஜிங்க், கோபால்ட் உள்ளிட்ட தனிமங்கள் உள்ளன. இவை 'பாலிமெட்டாலிக் நுாடுல்ஸ்' என அழைக்கப்படும் பாறைகளில் கலந்துள்ளன என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அதே போல சூரிய ஒளி இல்லாத 13 ஆயிரம் - 19 ஆயிரம் அடி ஆழ பகுதிகளில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய, இந்த தனிமங்களின் மூலக்கூறுகள் உதவுகின்றன. இப்பகுதி 45 லட்சம் சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது என தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 25

சதீஷ் தவான் அவர்களின் பிறந்த நாள்

சதீஷ் தவான் (பஞ்சாபி: ਸਤੀਸ਼ ਧਵਨ, இந்தி: सतीश धवन) (25 செப்டம்பர் 1920–3 சனவரி 2002) ஓர் இந்திய ராக்கெட் ஆராய்ச்சியாளர் ஆவார். சிறீநகரில் பிறந்த இவர் இந்தியாவிலும் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும் கல்வி பயின்றுள்ளார். 1972-இல் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். இவரது நினைவாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இசுரோ ஆய்வு மையத்துக்கு இவருடைய பெயர் இடப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 ஓர் ஆண் மான் காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தபோது அதற்கு தாகம் ஏற்பட்டது. தண்ணீரை தேடி ஒரு குளத்தின் அருகே வந்தது. தாகம் தண்ணிரை வயிறு முட்ட நீரை பருகியது.

அப்போது தன்னுடைய உருவத்தை தண்ணீரில் கண்டது. தலைக்கு மேல் கிளைகள் போல் விரிந்து இருந்த தன் கொம்புகளின் பிம்பத்தை நீரில் பார்த்தது. ‘அவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! உலகிலேயே மிக அழகான மிருகமாக நான் இருப்பதற்கு இந்த கொம்புகளே காரணம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டது.

சொல்லியவாறு கீழே குனிந்த மான் ஒல்லியான தன்னுடைய கால்களை பார்த்தது; மிகவும் ஏமாற்றமடைந்தது. ‘இல்லை, இந்த கால்கள் என்னை அழகில்லாதவனாக்குகின்றன. உலகிலேயே அழகான மிருகமாக நான் இருக்க முடியாது,’ என்று சொல்லி வருந்தியது.

மரங்களுக்குப் பின்னால் நின்றவாறு பசியோடு இருந்த புலி ஒன்று சத்தம் இல்லாமல் மானை பார்த்துக் கொண்டிருந்தது. மானை நோக்கி மிக மெதுவாக நகர்ந்து வந்தது. உயரமாக வளர்ந்திருந்த புற்கள் சரசரத்தன. தன் எண்ணங்களில் மூழ்கியிருந்த மான் புலி நெருங்குவதை கவனிக்கவில்லை. 

புலி, மானை பிடிக்க பாய்ந்தது. திடுக்கிட்ட மான் மிக வேகமாக ஓட துவங்கியது. புலியிடமிருந்து தப்பித்து நான்கு கால் பாய்ச்சலில் அதிவேகமாக ஓடியது. புலி மிகவும் பின்னால் துரத்திக் கொண்டு வந்தது.

இனிமேல் துரத்தினாலும் மானை பிடிக்க முடியாது என்று புலி முடிவு செய்த நேரத்தில் மானின் கொம்புகள் ஒரு மரக்கிளையில் சிக்கிக்கொண்டன. மரக்கிளையில் இருந்து விடுபட மான் மிகவும் முயற்சி செய்தது. ஆனால், மானால் கொம்புகளை விடுவிக்க முடியவில்லை.

“என் கால்கள் அழகாக இல்லை என்று நான் அவமானமடைந்தேன். நான் தப்பித்துக் கொள்ள அவை தான் எனக்கு உதவி புரிந்தன. என் கொம்புகளை நினைத்து நான் பெருமிதம் அடைந்தேன். ஆனால், என்னுடைய இறப்புக்கு அவையே காரணமாக உள்ளன” என்று மான் வருத்தத்துடன் தனக்குள் சொல்லிக் கொண்டது.

இதற்குள் மானை நெருங்கிய புலி அதன் மீது பாய்ந்து, அதை கொன்று தின்றது.

நீதி: ஆபத்துக்கு உதவாத அழகை விட நம்மை காக்கும் நமது உறுப்புகள், நல்ல நண்பர்கள் நமக்கு தேவை.
இன்றைய செய்திகள்

25.09.2025

⭐தமிழகத்தில் ₹.1,500 கோடியில்,133 புதிய துணை மின்நிலையங்கள் & ஏற்கெனவே உள்ள துணை மின்நிலையங்களில், 52 பவர் டிரான்ஸ் ஃபார்மர்களைப் பொருத்த தமிழக மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

⭐நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 20 பெட்டிகளுடன் இயக்கம்: 1,440 பேர் பயணிக்கலாம்.

⭐தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐசிசி தரவரிசையில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவின் உச்சத்தை தொட்ட அபிஷேக் சர்மா..!

Today's Headlines

⭐The Tamil Nadu Electricity Board is planning to install 133 new substations & 52 power transformers in existing substations at a cost of ₹1,500 crore in Tamil Nadu.

⭐ Nellai - Chennai Vande Bharat train to operate with 20 coaches: 1,440 passengers can travel. 

⭐ Meteorological Centre has announced heavy rain likely in Tamil Nadu till 30th September

 SPORTS NEWS 

🏀Cricket - Abhishek Sharma surpasses Virat Kohli, Suryakumar Yadav in ICC rankings.


24 September 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.09.2025




திருக்குறள்:

குறள் 512:

வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை. 

விளக்க உரை: 

6 - 9 ஆம் வகுப்பு திறன் காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள்


திறன் இயக்கம் 2025

6 - 9 ஆம் வகுப்பு திறன் காலாண்டு தேர்வு மதிப்பெண் உள்ளீடு ( MARK ENTRY ) சார்ந்த வழிகாட்டுதல்கள்

👉 காலாண்டு தேர்வு மதிப்பெண்களை செப்டம்பர் மாதத்தின் மதிப்பீடாக கொண்டு மதிப்பெண்களை உள்ளீடு செய்ய வேண்டும்

JOIN KALVICHUDAR CHANNEL