. -->

Now Online

FLASH NEWS


Wednesday 24 April 2024

குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

குரூப்-4 தேர்வு வருகிற ஜுன் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்து TNPSC  அறிவித்துள்ளது. 

குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முதல்நிலைத் தேர்வு ஒன்றாகவும், பிரதானத் தேர்வு தனியாகவும் நடைபெற உள்ளது. குரூப் 1, 2, 4 தேர்வுகளைத் தவிர மற்ற அனைத்துத் தேர்வுகளும் ஒருங்கிணைந்த தேர்வுகளாக நடத்தப்பட உள்ளது. இதில், 6244 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் ஜூன் 9இல் நடைபெறுகிறது.

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான பட்டியலில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றொரு தீர்ப்பு - நாள்: 23.04.2024 - மார்ச் 2023ல் பிறப்பித்த உத்தரவை பின்பற்ற உத்தரவு!!

Monday 22 April 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.04.2024




திருக்குறள்:

பால்:பொருட்பால்

இயல்: அரணியல்

அதிகாரம்: நாடு

குறள் எண் : 734

குறள்:
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.

பொருள்:
மிகுந்த பசியும், நீங்காத நோயும், வெளியில் இருந்து வந்து தாக்கும் பகையும் இல்லாத நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்.

பழமொழி :
Sweet are the uses of adversity

வறுமை வாழும் முறையைக் கற்றுக் கொடுக்கிறது


இரண்டொழுக்க பண்புகள் :

 1. பெரியோர் , பெற்றோர், ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :

பொருள் இல்லாதவன் ஏழையல்ல. எப்போதும் மனதில் ஆசையைச் சுமந்து திரிபவனே ஏழை.___ நபிகள் நாயகம்

பொது அறிவு : 

1. திரவத்தங்கம் என்று அழைக்கப்படுவது எது?


விடை: பெட்ரோலியம் 

 2. “தமிழ் மொழி” என்பது?

விடை: இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
English words & meanings :

 minuscule - extremely small, மிகமிகச் சிறிதான, 

microcosm-a small model of some thing large, நுண்ணிய மாதிரி

ஆரோக்ய வாழ்வு : 

நுங்கு பயன்கள் :நுங்கில், வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல்வெப்பத்தை தணிக்கக் கூடியது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியது.

ஏப்ரல் 22

புவி நாள்


புவி நாள் (Earth Day) என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.



அதேசமயத்தில், ஐக்கியஅமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.

அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் (புவி [பூமி] நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 அரசன் கண்ட கனவு


ஒரு அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கைவாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில் பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒருநாடி ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடிஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கைவாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும் கோபமுற்று, இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்! என்று உத்தரவிட்டான். அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை.

இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கைவாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான். அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப்பார்த்துவிட்டு, மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள் என்று பலன் கூறினார். 

இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான். இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள். அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்து விடுவார்கள் என்றார். இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம்.

நீதி :
பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாண்டால் வாழ்வில் ஜெயிக்கலாம்
இன்றைய செய்திகள்

22.04.2024

*பாராளுமன்ற தேர்தல்: 
தமிழகத்தில் ஆண்களை விட அதிகமாக வாக்களித்து அசத்திய பெண்கள். 

*கர்நாடக மாநிலம், உத்தரகனடா மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 6 பேரும், ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

*ராணுவ உதவிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா: இஸ்ரேல் பிரதமர், உக்ரைன் அதிபர் வரவேற்பு.

*மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 23-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு.

*பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்.

Today's Headlines

*Parliamentary Elections:
Women vote more than men in Tamil Nadu.

*6 people have drowned in the river in Uttarakhand district of Karnataka state. All the 6 deceased belonged to the same family from Hubli.

*US approves military aid: Israel PM, Ukraine president welcome.

*Chance of rain in Western Ghats districts till 23rd.

*Vinesh Phogat qualified for Paris Olympics.
 Prepared by

Covai women ICT_போதிமரம்


Sunday 21 April 2024

ஏப்ரல் 2024 மாத ஊதி யத்தில் வருமான வரி பிடித்தம் செய்யப் பட்டுள்ள விவரம்


New Regime

1. கரூர் ,நீலகிரி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு pay roll run நாமே ரன் செய்து கொள்ளலாம் எனும் பொழுது ஒருமுறை schedule run கொடுத்தால் போதுமானது .ஐந்து நிமிடத்திற்குள் ரிசல்ட்டின் பெயர் வந்துவிடும். மற்ற மாவட்டங்களுக்கு centralized run செய்து விட்டார்கள்.

2. வருமான வரி பிடித்தமானது new regime என்று தேர்வு செய்து பிடித்தவர்களுக்கு எந்த ஒரு குழப்பமும் இன்றி

Month gross X 12 months = Income என்று கால்குலேட் செய்து அதனுடன் இரண்டு மாத DA arrear add செய்து total income calculate ஆகி வந்துள்ளது.

பின்னர் standard Deduction 50000 கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு வருமான வரி பிடித்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சரியாக வருகின்றது.

இங்கு ஐடி மற்றும் செஸ் என்று தனியாக காண்பிக்கப்படும் .

IT மற்றும் cess இரண்டையும் 11 மாதங்களாக divide செய்து மாத ஊதியத்தில் பிடித்தம் மேற்கொள்ளப்படுகிறது.

இதன்படி பார்க்கும் பொழுது மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரிக்கும் cess வித்தியாசம் காண்பிக்கப்படும். ஆனால் 11 மாதம் என்று பார்க்கும் பொழுது சரியே.

கொளுத்தும் வெயில் : தமிழகத்தில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பா? கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை


Wednesday 17 April 2024

தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் மறக்காமல் எடுத்துக் கொள்ள வேண்டிய பொருட்கள் விபரம்



1. மாற்று உடைகள்
( தேவையானவை )
2. தேங்காய் எண்ணெய்
3. பவுடர், சீப்பு , பொட்டு, ப்ரஷ் , பேஸ்ட்
4. மாத்திரைகள் , இன்ஹேலர்கள்
5. விக்ஸ், தலைவலி தைலம்
6. பிஸ்கட் பாக்கெட்
7. இரண்டு ஸ்கெட்ச்
8. Buds - 2 - ( மை வைக்க )
9. டார்ச் லைட்
10. பெட்ஷீட் / துண்டு
11. மூக்கு கண்ணாடி (தேவை உள்ளவர்கள்)
12. பேனா சிவப்பு & நீலம்
13. Ex. box & Table fan ( வாகனத்தில் செல்பவர்கள் ) ( Booth ல போதிய fan வசதி இருக்காது )
14. தேவையான குடிநீர் ( வேறு குடிநீர் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் )
15. EDC - படிவம் original. (ஒட்டு போட)
கல்விச்சுடர்

16. Voter ID / ஆதார் Card.
17. 1 முதல் 500 வரை எண்கள் கொண்ட பேப்பர் - 2 ( P1 க்கு மட்டும் )
18. முந்திரி , பாதாம் பருப்பு + திராட்சை, கடலை மிட்டாய் / நொறுக்கு தீனி
19. Cell phone + Headphone + Charger
20. flask ( தேவை உள்ளவர்கள்)
21. கண் கண்ணாடி
22. இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் டேங்க் ஃபுல் செய்து வரவும்
23. சானிடைசர்
24. கொசுவர்த்தி கம்போர்ட் வத்தி தீப்பெட்டி
25. தண்ணீர் பாட்டில்
மற்ற பொருட்கள் தங்களுக்கு தேவைகள் இருந்தால் எடுத்து செல்லவும்.