. -->

Now Online

FLASH NEWS


Saturday 23 March 2019

மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு












தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளின் 3ம் பருவ பருவத் தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


 ஏப்ரல் 12ம் தேதியோடு முழு ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


 மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 29ம் தேதியுடன் பொதுத்தேர்வுகள் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.


 தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


 இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


 அதேபோல, தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கடந்த 14ம் தேதி தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.



இது தொடர்பாக, அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.


அதில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 29ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மற்ற வகுப்புகளுக்கு 3ம் பருவ தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

3ம் பருவ தேர்வுகளை ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், அதற்கான கால அட்டவணையை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


 இதையடுத்து, 2018-19ம் கல்வியாண்டில் ஏப்ரல் 12ம் தேதியே கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு 3ம் பருவ தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.