. -->

Now Online

FLASH NEWS


Sunday 23 June 2019

காஞ்சிபுரம் நகராட்சியில் 48 நாட்கள் பள்ளிகள் நேரம் குறைப்பு - அறிவிப்பு...

காஞ்சிபுரம் நகராட்சியில் பள்ளிகள் ஜூலை 1 - ஆக., 17 வரை காலை 8.30 முதல் மதியம் 1.30 வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் அத்திவரதர் விழாவை முன்னிட்டு பள்ளிகளில் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் விழாவை காண தினமும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் காஞ்சிபுரத்தில் மட்டும் 48 நாட்களுக்கு பள்ளிகள் நேரம் குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.