. -->

Now Online

FLASH NEWS


Sunday 15 September 2019

5 மற்றும் 8 ஆம்வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வால் CCE - முப்பருவ பாடத்திட்ட முறை இரத்தா?







 

5 மற்றும் 8 ஆம்வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வால், முப்பருவபாடத்திட்ட முறை இரத்தா?

  

ஐந்து மற்றும் எட்டாம்வகுப்புகளுக்கு, பொதுதேர்வு நடத்தப்படும்' என,தமிழக அரசுஅறிவித்துள்ளதால்,ஏற்கனவே உள்ள,முப்பருவ பாடமுறை ரத்துசெய்யப்படுமா என்ற,கேள்வி எழுந்துள்ளது.

மாணவர்களின் கற்றல்திறனை அதிகரிக்கும்வகையில், அவர்களுக்கு,ஐந்து மற்றும் எட்டாம்வகுப்பில், வழக்கமானதேர்வு நடத்த வேண்டும்.

தேர்வு நடத்துவதுதொடர்பாக, மாநிலஅரசுகள் சுயமாக முடிவுஎடுக்க லாம் என, இந்தஆண்டு மார்ச்சில், மத்தியஅரசு உத்தரவிட்டது.

இதை பின்பற்றி, நடப்புகல்வி ஆண்டு முதல்,ஐந்து மற்றும் எட்டாம்வகுப்புகளுக்கு, பொதுதேர்வு நடத்தப்படும் என,தமிழக அரசுஅறிவித்துள்ளது.

குழப்பம்

இதற்கான அரசாணையை, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிறப்பித்துள்ளார்.

 சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., என்ற, மத்திய கல்வி வாரியங்கள், இன்னும் முடிவெடுக்காத நிலையில், தமிழக அரசு முந்திக் கொண்டு, இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த அறிவிப்பால், பல்வேறு நடைமுறை குழப்பங்களும், சந்தேகங்களும் எழுந்துள்ளன.

 தற்போதைய நடைமுறைப்படி, ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலும், முப்பருவ பாடமுறை அமலில் உள்ளது.

இதன்படி, மாணவர்களுக்கு, முதல் பருவ தேர்வு, இரண்டாம் பருவ தேர்வு மற்றும் மூன்றாம் பருவ தேர்வு நடத்தப்படுகிறது.

 ஒவ்வொரு பருவ தேர்வுக்கும் பாட வாரியாக, தனியாக புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.

முதல் பருவ தேர்வு முடிந்ததும், அந்த பாட புத்தகங்களை பயன்படுத்துவதில்லை.

அடுத்த பருவ தேர்வில், முதல் பருவ தேர்வுக்கான பாடங்களில் இருந்து, கேள்விகளும் இடம் பெறாது.

 இரண்டாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும், மூன்றாம் பருவ தேர்வுக்கு, தனியாகவும் புத்த கங்கள் வழங்கப்படும்.

 அந்தந்த பருவ தேர்வுக்கு, அந்தந்த பாடப் புத்தங்களை மட்டுமே படிக்க வேண்டும்.

 முந்தைய பருவ பாடங்களை படிக்க தேவையில்லை.

  

அபாயம்

இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்படும் என அறிவித்ததால், மாணவர்கள், ஓராண்டு முழுவதும் நடத்தப்படும் மொத்த பாடங்களையும் படித்தாக வேண்டும்.

அப்படியென்றால், முதல் பருவ பாடங்களை, இரண்டாம் பருவத்துக்கும், முதல் மற்றும் இரண்டாம் பருவ பாடங்களை, மூன்றாம் பருவ தேர்வுக்கும் சேர்த்து படிக்க வேண்டியதிருக்கும்.

இதனால், மாணவர்களின் மன அழுத்தம் அதிகரிப்பதுடன், புத்தக சுமையும் அதிகரிக்கும்.

 மேலும், பொது தேர்வு முறை அமலானால், முப்பருவ பாட முறையை, ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

தொடர் மதிப்பீட்டு முறைஎன்ற, சி.சி.இ.,நீக்கப்படவேண்டும்.

 ஏனென்றால், ஓராண்டுபாடங்கள்அனைத்தையும்,மாணவர்கள் படிக்கவேண்டும் என்றால்,அவர்களுக்கு கூடுதல்வேலை நாட்களும்,நேரமும் தேவைப்படும்.

 எனவே, சி.சி.இ.,முறைக்கு தேவையான,பாடம் தொடர்பான இணைசெயல்பாடுகளில்,மாணவர்களால் ஈடுபடமுடியாத நிலை ஏற்படும்.

 அதேபோல், கட்டாயகல்வி உரிமைசட்டத்தின்படி, 14 வயதுவரையுள்ளமாணவர்களுக்கு,தொடர்ந்து அடிப்படைகல்வி கிடைப்பதிலும்,சிக்கல் ஏற்படும் அபாயம்உள்ளதாக,கல்வியாளர்கள்கருதுகின்றனர்.