. -->

Now Online

FLASH NEWS


Saturday 14 September 2019

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு அக்டோபர் மாதத்தில் பணியிடை பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!

பள்ளிக் கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை  கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

 

மத்திய மனிதவள மேம்பாட்டு  அமைச்சகம் சார்பில் தொடக்க மற்றும் உயர்தொடக்க  நிலைப் பள்ளி(நடுநிலைப் பள்ளி) ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்பட உள்ளது. தேசியகல்வியியல் ஆராய்ச்சிமற்றும் பயிற்சிநிறுவனத்தின் தேசியகருத்தாளர்கள் குழு மாநிலகருத்தாளர்களுக்கு 6நாட்கள் பயிற்சி அளிப்பர்.இந்த மாநில கருத்தாளர்கள் மூலம் 1முதல் 8ம் வகுப்புவரையிலான அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்கப்படும்.இதற்காகமாநில  அளவில் 6 பேர்கொண்ட கருத்தாளர்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் சென்னை உட்பட 16 மாவட்டங்களுக்கு செப்.16 முதல் 21ம் தேதி வரையும்,மதுரை  உட்பட இதர 16மாவட்டங்களுக்கு 23 முதல்28ம் தேதி வரையும் 2 கட்டங்களாக பயிற்சிஅளிக்கப்படும். அதன்பின்அக்டோபர் மாதம் மாநிலகருத்தாளர்கள் மூலம்ஒன்றிய  அளவில்ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப்படும்.