. -->

Now Online

FLASH NEWS


Friday 10 January 2020

குரூப் 4 முறைகேடு: ஆடு மேய்த்தவர் தேர்வில் முதலிடம்.! வெளியான திடுக்கிடும் தகவல்கள்.!


தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது, இந்தநிலையில் குரூப் 4 தேர்வில் 300க்கு 289 புள்ளி 5 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆடு மேய்க்கும் தொழிலாளி தலைமறைவானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படித்து பல ஆண்டுகளாக இந்த தேர்வை எழுதியவர்கள் கூட 300க்கு 250 மதிப்பெண்ணை எட்டிப்பிடிப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால் 25 வருடங்களுக்கு முன்பு கல்லூரி படிப்பை முடித்த திருவராஜ் ஆடு மேய்க்கும் தொழிலை பிரதானமாக செய்து வருகிறார். திருவராஜ், 300க்கு 289.5 மதிப்பெண் எடுத்தது எப்படி என்பது பலரின் கேள்வியாக உள்ளது.
Source: Seithipunal