. -->

Now Online

FLASH NEWS


Thursday 23 January 2020

5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வில் சலுகை?


5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வில் சலுகை அளிப்பது தொடர்பாக ஒருவாரத்தில் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.



ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் போக்குவரத்துக்கழக பணிமனையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர், எரிபொருள் சேமிப்பு, சாலைவிதிகளை பின்பற்றியதில் சிறந்து விளங்கிய ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் வருகைப்பதிவு 75 சதவீதம் இருக்க வேண்டும் என்றார்.