. -->

Now Online

FLASH NEWS


Wednesday 15 January 2020

தாராளமாக வலம் வரும் போலி தண்ணீர் பாட்டில்


  தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் நகராட்சி தண்ணீரை பாட்டில்களில் அடைத்து போலி மினரல் வாட்டர் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்தவர்களை கடந்த மாதம் தேனி நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரிகளும், உணவுப்பொருள் கலப்பட தடுப்பு பிரிவு அதிகாரிகளும் பிடித்தனர். அதன் பின்னர் போலி மினரல் வாட்டர்கள் வேறு பல இடங்களில் நடந்து வருவது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் சென்றது. ஆனால் தேனி நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக இன்னும் புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு கடைகள், டாஸ்மாக் பார்களில் போலி தண்ணீர் பாட்டில் தான் விற்பனையாகிறது.