. -->

Now Online

FLASH NEWS


Sunday 16 February 2020

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 27 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் சமையல் கூடத்துக்கு, எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்


‘அட்சய பாத்திரம்’ என்ற அறக்கட்டளை, இந்தியாவில் 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 16 ஆயிரத்து 856 பள்ளிகளில் படிக்கும் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க மதிய உணவை வழங்கி வருகிறது.அதுபோல அந்த அறக்கட்டளை, சென்னை திருவான்மியூரில் சமையல் கூடத்தை அமைத்து 16 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு காலை உணவை கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் அளித்து வருகிறது. தற்போது இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் மேலும் பல மாணவர்கள் பயனடையும் வகையில் அதை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.

பூமி பூஜைஅதற்காக, 12 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க வசதியாக ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையிலும், 15 ஆயிரம் மாணவர்களுக்கு சமையல் செய்ய வசதியாக பெரம்பூர் பேரக்ஸ் சாலையிலும் தலா ஒரு சமையல் கூடத்தை அட்சய பாத்திரம் அறக்கட்டளை அமைக்க இருக்கிறது. அதற்கான இடத்தை அந்த அமைப்புக்கு சென்னை மாநகராட்சி குத்தகையாக வழங்கி இருக்கிறது.அந்த 2 சமையல் கூடங்களை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று கிரீம்ஸ் சாலையில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சமையல் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், டாக்டர் சரோஜா, பாண்டியராஜன் அட்சய பாத்திரம் அமைப்பின் தலைவர் மது பண்டிட் தாசா, துணைத் தலைவர் சஞ்சலபதி தாசா உள்பட பலர் கலந்துகொண்டனர்.ரூ.5 கோடி நிதிநிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-மாணவர்களுக்கு உணவளிப்பது, தேசத்தின் எதிர்காலத்தை பலப்படுத்துவதற்கு இணையானது. அதிலும், உடல் நலனுக்கு காலை உணவு மிகவும் அவசியமானது. காலை உணவு சாப்பிடாத குழந்தைகளால் வகுப்பில் பாடங்களை கவனமுடன் கற்க முடியாது. இதுபோன்ற உன்னதமான நோக்கத்துக்கு இடமளித்த தமிழக அரசு, சென்னை மாநகராட்சியை பாராட்டுகிறேன்.வசதி குறைவான மாணவர்களும் கல்வியில் சிறக்க வேண்டும். எனவேதான் இந்தத் திட்டத்துக்கான சமையல் கூடம் மற்றும் பல்வேறு தளவாடங்களை அமைக்க கவர்னரின் விருப்புரிமை நிதியாக ரூ.5 கோடியை இந்த அமைப்புக்கு வழங்கி இருக்கிறேன்.ஏழை மாணவர்களின் கல்விக்கு தமிழக கவர்னர் மாளிகை தொடர்ந்து உதவி செய்யும். இந்தத் திட்டத்தை தமிழகத்தின் நகர்ப்புற, ஊரக மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும் கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னோடி மாநிலம்இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-எம்.ஜி.ஆரால் 1982-ம் ஆண்டு சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை தொடங்கியதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இத்திட்டத்திற்கு மேலும் மெருகேற்றி, சத்துணவில் வழங்கப்படும் உணவு வகைகளை மாற்றியமைத்து, கலவை சாதங்கள் உள்ளிட்ட 13 வகையான உணவுகளுடன் மசாலா முட்டைகளும் வழங்க மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.சத்துணவு திட்டத்தினை செம்மையாக செயல்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தனியாக நிர்வாக அமைப்பு ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 43 ஆயிரத்து 283 சத்துணவு மையங்கள் மூலம் சுமார் 50 லட்சம் மாணவ, மாணவிகள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர்.ஏழை, அடித்தட்டு மக்களுக்கும் பசியில்லா நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அம்மா உணவகம் திட்டம் கொண்டு வரப்பட்டு, மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெரியோர்களுக்கு கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.சென்னையில் காலை உணவுஏழை குழந்தைகள் தங்களது கல்வியை தொடர பசி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்துடன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்திற்கு ‘அட்சய பாத்திரா’ என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. இந்த நிறுவனம் தற்போது சென்னையில் உள்ள 24 மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 5,785 மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.இந்த காலை உணவு திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கு மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு கிரீம்ஸ் சாலையில் 20 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் சுமார் 35 ஆயிரம் சதுர அடி பரப்பிலும், முறையே 12 ஆயிரம் மற்றும் 15 ஆயிரம் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் அமைப்பதற்கு சென்னை மாநகராட்சியுடன் இந்த நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது.அரசு கட்டணம் செலுத்தும்சுகாதாரமான முறையில் உணவு தயார் செய்யப்படுவதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களிலேயே சமையல் கூடங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு குடிநீர், மின் இணைப்பு மற்றும் மின்சார கட்டணத்தையும் சென்னை மாநகராட்சியே செலுத்த அரசு முடிவு செய்துள்ளது. கிரீம்ஸ் சாலையில் அமையும் சமையல் கூடத்திற்கு உண்டான செலவினத்திற்கு கவர்னர் தனது விருப்புரிமை நிதியின் மூலம் நிதி உதவி வழங்கியுள்ளதற்கு எனது பாராட்டுகள்.அட்சய பாத்திரா என்ற இந்த நிறுவனம், சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பசியின்றி படிப்பை தொடர, உங்களது காலை உணவு திட்டத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டும்.இன்று நான் முதல்-அமைச்சராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 

இந்த நன்நாளில், காலை உணவு திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் சமையல் கூடங்கள் அமைக்க நடத்தப்படும் பூமி பூஜை விழா என்ற ஒரு அன்னதானம் வழங்குதல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Source Dinathanthi