. -->

Now Online

FLASH NEWS


Wednesday 5 February 2020

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்


5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அறிவித்து இருந்தார். 

இந்நிலையில் தற்போது அவர், “பொதுத் தேர்வு ரத்தானதால் மாணவர்களிடம் வசூலித்த கட்டணத்தொகையை ஆசிரியர்கள் மீண்டும் அவர்களிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும். அது ஆசிரியர்களின் கடமை” என்று கூறியுள்ளார்.


*5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தோ்வுக்காக மாணவர்களிடம் வசூல் செய்த தொகை திரும்பி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தோ்வு வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு தற்போதுள்ள நிலையே தொடரும் என அமைச்சர் பதிலளித்தார்.