. -->

Now Online

FLASH NEWS


Tuesday 31 March 2020

அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் - IOB அறிவிப்பு



*தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரையில் இயங்க வேண்டும் என, வங்கிகள் கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

*இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நிவாரண நிதியுதவிகளை அறிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

*இந்த நிதியுதவிகளையும், முதியோர் ஓய்வூதிய தொகையையும், அவற்றின் பயனாளர்களான பொதுமக்கள், வங்கிகளுக்கு நேரில் வந்து தடையின்றி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*அவ்வாறு, வாடிக்கையாளர்கள் வரும்போது, சானிடைசரால் கைகளை தூய்மை செய்து கொள்வதை உறுதி செய்வதோடு, குறைந்தபட்சம் ஒரு மீட்டர் என்ற சமூக விலகலை கடைபிடிக்கவும், வங்கிகள் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Polimer News