. -->

Now Online

FLASH NEWS


Sunday 15 March 2020

தமிழகம் முழுவதும் விடுமுறை" முதல்வரின் அதிரடி அறிவிப்பு .!





தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல்31 ஆம் தேதி வரை விடுமுறை என நேற்று அறிவிக்கப்பட்டது.

மேலும் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இன்று காலை முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முடிவுகளை முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல மாநிலம் முழுவதும் 5 ஆம் வரை விடுமுறை என்று உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது