கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில், ஜூலை மாதம் தேர்வுகளை நடத்த மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இன்று சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை தேர்வுகள் நடைபெறும். தேர்வர்கள் சானிடைசர்கள் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். முககவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும். தேர்வு அறைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
FLASH NEWS
KALVICHUDAR TABLE | ||||||||||||
1-5th | 6-9th | 10th | 12th | |||||||||