. -->

Now Online

FLASH NEWS


Sunday 31 May 2020

தமிழகத்தில் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு...


ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஜூன் 30 வரை பொதுமுடக்கம் நீடிக்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மறுஉத்தரவு வரும் வரை வழிபாட்டு தலங்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கும். மத்திய அரசின் அறிவிப்பின் அடிப்படையில் ஜூன் 30 நள்ளிரவு 12 மணி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுகிறது என்றார்.

*தமிழகத்தில் ஜூன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு

*இன்றுடன் 4வது கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் அறிவிப்பு

*மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் படி ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுடன் நீட்டிப்பு

*வழிபாட்டு தலங்களுக்கான தடை தொடரும்

*அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கான தடை தொடரும்.