. -->

Now Online

FLASH NEWS


Sunday 31 May 2020

பிரதமர் பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர் மோகன் என்ன‌ செய்தார்?




அவர் என்ன செய்துவிட்டார் என்றால் ஒன்றுமில்லை, தன் சேமிப்பு தன் மகளின் படிப்புகாக சேர்த்த 5 லட்சம் ரூபாய் என எல்லாவற்றையும் கொரோனா காலத்தில் மக்களின் உணவுக்காக செலவழித்தார்

மதுரையில் அவர் வீடுதேடி சென்று உதவி பெற்றோர் ஏராளம், ஒரு கட்டத்தில் மனைவியின் நகையினை செலவழித்து உதவிகள் செய்தார்.

அவர் மனைவியின் நகையினை வாங்கியோர் அவர்கள் போக்கில் இருக்க, இவர் அதை கொண்டு உணவிட்ட செய்தி நாட்டை உலுக்கியது.

பிரதமர் மோடி இதை கவனித்து இன்று நாடறிய அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

ஆம், தேசம் முழுக்க இன்று அந்த மோகனின் சேவைகளை உரக்க சொன்னார் பிரதமர் மோடி

மதுரைக்கும் டெல்லிக்கும் தொடர்பு அதிகம்

மதுரைக்கு வந்தபின்புதான் , மதுரை மக்களை கண்ட பின்புதான் காந்தி சட்டை அணியமாட்டேன் என முடிவெடுத்து மேல் துண்டோடு சுற்றினார், சில நேரம் அதுவுமில்லை

இப்பொழுது மோகன் எனும் சலூன்கடைகாரரின் தியாகம் கண்டு மெய்சிலிர்க்கின்றார் மோடி

பிரதமர் மோடியின் அறிவிப்பினை கேட்டு தேசம் மோகனை உற்று பார்க்கின்றது. அவர் வழியில் பலர் உதவ தொடங்கிவிட்டனர்