. -->

Now Online

FLASH NEWS


Tuesday 30 June 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னையில் மட்டும் 2393 பேர் பாதிப்பு 




தமிழகத்தில் கடந்த 25-ந்தேதியில் இருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி வருகிறது.
இன்றும் 3,943 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 90,167 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 2,325 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அதேவேளையில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.