. -->

Now Online

FLASH NEWS


Thursday 9 July 2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி




*தமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து இருந்தது. அதன்பின் 4 ஆயிரத்தில் இருந்து சில நாட்களாக குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 4,231 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளையில் 3,994 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 78,161 பேர் குணமடைந்துள்ளனர்.
இன்று 65 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.