t> கல்விச்சுடர் கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

5 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.12.2025

திருக்குறள்: 

குறள் 999: 

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன் றிருள் 

உரை: 

பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

பழமொழி :
Trust is the root of every strong bond. 

நம்பிக்கை தான் ஒவ்வொரு உறவின் வேர்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

கடவுளைத் தெரிந்து கொள்ள சிறந்த வழி எல்லாவற்றிடமும் அன்பு செலுத்துதலே ஆகும் -வின்சென்ட் வான்காக்

பொது அறிவு : 

01."எண்கணித ஏந்தல்" என்று அழைக்கப்படும் இந்திய கணித மேதை யார்?


ஸ்ரீனிவாச ராமானுஜம்
Srinivasa Ramanujam

02.தமிழ்நாட்டின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் எது?

 அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
Mother Teresa Women's University
English words :

startled-felt sudden shock

vibrant-lively

தமிழ் இலக்கணம்: 

 சொல்லின் முதலில் வரா எழுத்துகள்
1. மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வரா 
2. ஆயுத எழுத்து சொல்லின் முதலில் வராது
3. ஞ, ய, வ வரிசையில் குறிப்பிட்ட மெய்யெழுத்துகள் தவிர வேறு எதுவும் முதலில் வராது

அறிவியல் களஞ்சியம் :

 உங்கள் டார்ச் விளக்கிலிருந்து வெளிப்படும் ஒளி சந்திரனை அடைய 238,000 மைல்கள் அல்லது 384,400 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். அதற்கும் சந்திரனின் மேற்பரப்புக்கும் இடையில், வளிமண்டலம் என நமக்குத் தெரிந்த ஒன்று உள்ளது, இது அடிப்படையில் பூமியின் மேற்பரப்பை உள்ளடக்கிய காற்றின் ஒரு அடுக்கு ஆகும்.

டிசம்பர் 05

கல்கி அவர்களின் நினைவுநாள்





கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 திசம்பர் 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இரா. கிருஷ்ணமூர்த்தி என்ற இயற்பெயர் கொண்ட இவர் 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவுநாள்


நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார்
நீதிக்கதை

 எறும்பின் தன்னம்பிக்கை



மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார். 



அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். பின் அவர்களிடம், அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

இன்றைய செய்திகள்

05.12.2025

⭐கடந்த 15 ஆண்டுகளில் எய்ட்ஸ் நோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 81% குறைந்துள்ளது என்றும், புதிதாக எச்ஐவி நோய்த் தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை 49% குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

⭐தற்போது இந்தியாவில் 57 லட்சம் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-25-ம் ஆண்டில் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

⭐ இண்டிகோ விமான நிறுவனம் ஒரே நாளில் முக்கிய 3 நகரங்களில் விமானங்களின் சேவையை ரத்துசெய்தது.
மும்பை விமான நிலையத்தில் 86 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஒரு நாள் போட்டியில் இரு இந்திய வீரர்கள் ஒரே இன்னிங்சில் சதம் அடிப்பது இது 44-வது நிகழ்வாகும். விராட் கோலி சதம் அடித்தும் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது இது 8-வது முறையாகும்.

Today's Headlines

⭐A survey conducted by the Union Health Ministry has revealed that the number of deaths from AIDS has decreased by 81% and the number of new HIV infections has decreased by 49% in the last 15 years.

⭐At present, 5.7 million electric vehicles are registered in India. And the sales of electric cars increased in 2024-25.

⭐ IndiGo airline cancels flights to 3 major cities on one single day, and 86 flights are cancelled at Mumbai airport.

 SPORTS NEWS 

🏀This is the 44th time that two Indian players have scored centuries in the same innings in ODIs. This is the 8th time India has lost despite Virat Kohli scoring a century.


4 December 2025

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது 


3 December 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 04.12.2025

திருக்குறள்: 

குறள் 997: 

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் 
மக்கட்பண் பில்லா தவர் 

உரை: 

மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.

பழமொழி :
where trust lives, fear fades. 

நம்பிக்கை இருக்கும் இடத்தில் பயம் மறையும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. உள்ளத்தின் எண்ணங்களே நம்மை உருவாக்கும். எனவே நல்லதே நினைப்பேன்.

2. நம் எண்ணங்களை உருவாக்குவது நல்ல புத்தகங்களும் நல்ல நண்பர்களுமே. எனவே இவற்றை நல்ல விதமாக தேர்ந்தெடுப்பேன்.

பொன்மொழி :

இறைவன் ஒருவனே. இறைவன் மீது நம்பிக்கை வையுங்கள் .ஆனால் உங்கள் கடமையை செய்ய தவறாதீர்கள் - வள்ளலார்.

பொது அறிவு : 

01.இந்தியாவிற்கு வணிகத்திற்காக வந்த முதல் ஐரோப்பியர்கள் யார்?


போர்த்துகீசியர்கள்-The Portuguese

02. இந்தியாவின் முதல் நினைவு தபால் தலையில் யாருடைய உருவப்படம் இடம்பெற்றிருந்தது?

மகாத்மா காந்தி- Mahatma Gandhi

English words :

clueless-no idea

aboriginal-native

தமிழ் இலக்கணம்: 

 தமிழ் குறிப்பு 
சொல்லின் முதலிலும் கடையிலும் இறுதியிலும் வரும் சொற்களை நாம் அறிந்து கொண்டால் நாம் தமிழ் நன்கு பேசி எழுத முடியும் 
முதல் எழுத்துகள் 
1. உயிர் எழுத்துகள் பன்னிரெண்டும் சொல்லின் முதலில் வரும். 
2. க, ச, ந, த, ப, ம ஆகிய வரிசையில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் முதலில் வரும்
3. ஞ,ய,வ வரிசையில் சில உயிர் மெய் எழுத்துகள் மட்டுமே முதலில் வரும் 
4. ஞ வரிசையில் ஞா மட்டுமே முதல் எழுத்தாக வரும் 
5. ய வரிசையில் ய,யா,யு, யூ, யோ, யௌ மட்டுமே முதல் எழுத்தாக வரும் 
6. வ, வா, வி, வீ, வெ, வே, வை,  வௌ ஆகியவை மட்டுமே முதல் எழுத்தாக வரும்

அறிவியல் களஞ்சியம் :

 நெருப்பு எரியும் சமயம் உண்டாகும் அதிதவெப்பம் அதன்மேலிருக்கும் காற்றினையும் சூடாக்கும்.அப்படியாக சூடாக்கப்பட்ட காற்று வளிமண்டல,மற்றும் இயற்பியல் விதிகளின் படி மேலெழும்பும்

டிசம்பர் 04

இந்திய கடற்படை தினம் 

1971 இந்திய-பாகிஸ்தான் போரின், இந்தியக் கடற்படையால் பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி மீது நடத்தபட்ட கடல் வழி தாக்குதல்களே படைநடவடிக்கை திரிசூலம் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற படைநடவடிக்கை மலைப்பாம்பு.இவ்விரு நாடுகளின் சுதந்திரத்துக்கு பின்பு இப்பகுதியில் ஏவுகணைகளை செலுத்தும் கப்பல்கள் மற்றும் கப்பல்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டது இப்படைநடவடிக்கை திரிசூலம் மூலமாக முதல் முறையாக நடந்தேறியது[1].இந்த படைநடவடிக்கையின் வெற்றியை தான் இந்தியா கடற்படை தினமாக டிசம்பர் நான்காம் தேதியை கொண்டாடுகிறது. 

ஐ. கே. குஜ்ரால் அவர்களின் பிறந்தநாள்

இந்திர குமார் குஜ்ரால் (டிசம்பர் 4 1919 - நவம்பர் 30 2012)[1][2] இந்தியாவின் 12வது பிரதமர் ஆவார். இவர் மேற்கு பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.ஏப்ரல் 1997 இல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டதனால் அரசு கவிழும் நிலை தோன்றியது. தேர்தலை தவிர்ப்பதற்காக ஐக்கிய முன்னனிக்கும் காங்கிரஸுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்தது. முக்கிய முடிவுகள் எடுக்கும் போது காங்கிரஸை அரசு ஆலோசிக்க வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்தது அதைத்தொடர்ந்து குஜ்ரால் 1997 ஏப்ரல் 21 ல் பிரதமராக பதவியேற்றார்.
நீதிக்கதை

 முயற்சி வேண்டும்



ஒருநாள் தன் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளைப் பறித்து மூட்டைக் கட்டி மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டு அவற்றை விற்க நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்போது, சாலையின் ஒரு திருப்பத்தில் வண்டியின் ஒரு சக்கரம் பள்ளத்தில் போய் விழ, வண்டி சாய்ந்து விட்டது. கடவுளே! இது என்ன சோதனை? எனக்கு உதவி செய்! என்று அவன் மனமுருக வேண்டினான். கடவுள் உதவிக்கு வரவில்லை. இரண்டாம் முறை, மூன்றாம் முறையென பலமுறை கடவுளை உதவிக்கு அழைத்தும், அவர் வரவில்லை. வேறு யாரும் உதவிக்கு வரவில்லை. 



கடைசியில், பள்ளத்தில் விழுந்திருந்த சக்கரத்தைத் தானே தூக்கி சாலையில் நகர்த்தி வைக்க முயற்சி செய்தான். என்ன ஆச்சரியம்? தனியாக தன்னால் தூக்க முடியாது என்று அவன் நினைத்திருக்க, எளிதாக சக்கரம் பள்ளத்திலிருந்து எழுந்து விட்டது. அப்போதுதான், அவன் தன் பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு வழிப்போக்கன் சக்கரத்தைத் தூக்குவதில் உதவி செய்தது தெரிய வந்தது. அவனை வணங்கியவன் மிகவும் நன்றி ஐயா! கடவுள் செய்யாத உதவியை நீ செய்து விட்டாய்! என்றான். 



கடவுளே! உதவி செய்! என்று சொல்லியபடி கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், கடவுள் எப்படி உதவி செய்வார்? நீயே முயற்சி செய்தால்தான், கடவுள் உனக்கு உதவி செய்வார். அதற்கு நீதான் அவருக்கு, ஒரு வாய்ப்பு தர வேண்டும்! என்று கூறிவிட்டு அந்த ஆள் தன் வழியே நடந்தான்.

இன்றைய செய்திகள்

04.12.2025

⭐புழல் ஏரியில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை

⭐மழை- வெள்ளத்தால் பாதிப்பு: இலங்கைக்கு மருத்துவ குழுவை அனுப்பிய இந்தியா

⭐தமிழகத்தில் ஆண்டுக்கு 2500 பேர் வரை புற்றுநோயால் பாதிப்பு- மத்திய அரசு

⭐பெங்களூருவில் ரூ.28 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல். வெளிநாட்டினர் மூவர் கைது!

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀பேட்டர் தரவரிசையில் ரோகித் முதல் இடத்தில் தொடர்கிறார்.
பந்து வீச்சு தரவரிசையில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 6-வது இடத்தில் உள்ளார்.

Today's Headlines

⭐Increased water release from Puzhal Lake- Flood warning.

⭐Rain-Flood damage: India sends medical team to Sri Lanka.

⭐Up to 2500 people in Tamil Nadu are affected by cancer every year- Central Government.

⭐Drugs worth Rs. 28 crore seized in Bengaluru, Three foreigners arrested. 

 SPORTS NEWS 

🏀Rohit continues to be at the top of the batting rankings. Indian bowler Kuldeep Yadav is in 6th position in the bowling rankings.


Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது 


கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை( 04.12.2025 ) விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்

கனமழை காரணமாக பள்ளி , கல்லூரிகளுக்கு  நாளை( 04.12.2025 ) விடுமுறை விடப்படும் மாவட்டங்கள்
திருவள்ளூர் (பள்ளிகள்)

சென்னை (பள்ளிகள்)

8-வது ஊதியக்குழுவில் தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க திட்டம் இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்

 8-வது ஊதியக்குழுவில் 
தற்போதைய அகவிலைப்படியை அடிப்படை
ஊதியத்துடன் இணைக்க திட்டம் இல்லை

மத்திய அரசு திட்டவட்டம்

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது UPDATE LINK ATTACHED

Kalanjiyam App-ல் கார்த்திகை தீபம் வரையறுக்கப்பட்ட விடுப்பு தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது 


JOIN KALVICHUDAR CHANNEL