*நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் உரையில் இருந்து.....
*ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
*10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
*தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
*இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி
*ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
*இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்
*மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
*அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
*சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
*சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
*காவல்துறைக்கு ரூ 1,483 கோடி
*உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
*மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
*கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
*நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
*தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
*தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
*தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
*100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
*கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி
*தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி
*உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
*மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
*ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
*ஐடி துறைக்கு ரூ.116 கோடி
*போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி
*வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.
*நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு
*குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி
*அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி
*2017-18-ல் பொருளாதார வளர்ச்சி 9 சதவிகிதமாக இருக்கும்
*ஜெயலலிதா அளித்துள்ள 164 வாக்குறுதிகளில் 60 வாக்குறுதிகள் நிறைவேற்றம்.
*கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.
*மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு
*கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை
*மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி
*மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி
*மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.
*தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.
*தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை
*2017-18-ல் ரூ.15,930 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தபோது கூறினார்.
*100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்-பட்ஜெட்டில் அறிவிப்பு.
*150 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்