. -->

Now Online

FLASH NEWS


Tuesday 26 November 2019

மாணவ - மாணவியரிடம் சுற்றுலா விழிப்புணர்வு


அரசுப் பள்ளி மாணவ - மாணவியரை, மாமல்லபுரம் சிற்பங்கள் காண வைத்து, சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழக சுற்றுலாத் துறை, அரசுப் பள்ளி மாணவ - மாணவியரை, சுற்றுலா பகுதிக்கு அழைத்துச் சென்று, சுற்றுலா விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

மாமல்லபுரம் சுற்றுலாத்துறை நிர்வாகம், மாமல்ல புரம், வடநெம்மேலி, கேளம்பாக்கம் பகுதி அரசு பள்ளிகளின், மாணவ - மாணவியரை, நேற்று, கலைச்சிற்ப பகுதிக்கு அழைத்து வந்தது.செங்கல்பட்டு ஆர்.டி.ஓ., செல்வம், சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாணவர்களை வரவேற்று, இலவச பை, தொப்பி வழங்கினர்.பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களை காண வைத்து, அவற்றின் பின்னணி குறித்து விளக்கினர்.முட்டுக்காடு, தட்சிணசித்ரா, பாரம்பரிய வீடுகள் வளாகத்தை பார்வையிட்டு, வினாடி - வினா நிகழ்வில் பங்கேற்றனர்.