*கொரோனா அறிகுறிகளாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் முதலில் காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டன.
*அதன்பின் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா அறிகுறிகளாக குளிர், தசை வலி, தலைவலி, தொண்டை புண், வாசனை நுகர்வு தன்மையில்லாமை உள்ளிட்டவற்றையும் பட்டியலில் இணைத்தனர்.
*அதன் பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் அதுவும் கொரோனா அறிகுறி எனக் கூறினர்.
*அந்த வகையில் தற்போது கொரோனா அறிகுறிகளாக புதிய மூன்று அறிகுறிகளை நோய் கட்டுப்பாட்டு மையங்கள் அறிவித்துள்ளன.
*அதன்படி மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இருந்தாலும் அதுவும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
*2- 14 நாட்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அது கொரோனாவுக்கான அற்குறிகளாக இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.