. -->

Now Online

FLASH NEWS


Friday 19 February 2021

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி முடிவு செய்வார்: அமைச்சர் செங்கோட்டையன்



10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பச்சைப்பாளி மேடு என்ற இடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.
முதலமைச்சர் தான் பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து அறிவிப்பார் என்ற அவர், பிளஸ்- ஒன் பொதுத்தேர்வு குறித்து, இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றார்.

 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவத்துறையின் ஆலோசனை பெற்று முதல்வர் முடிவு செய்வார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.