t> கல்விச்சுடர் தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு உயர் நீதிமன்றம் தடை - கல்விச்சுடர் . -->

Now Online


Recent Posts Widget

26 February 2021

தொடக்கக்கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு உயர் நீதிமன்றம் தடை

தொடக்கக் கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆவுடையார் கோவிலைச் சேர்ந்த சண்முகநாதன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தொடக்கப் பள்ளி ஆசிரியராக 1992-ல் நியமிக்கப்பட்டேன். 2003 ஜூனில் பதவி உயர்வுக்கான தகுதியைப் பெற்றேன். ஒவ்வொரு ஆண்டும் பொது இடமாறுதல் கலந்தாய்வும், பின்னர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வும் நடைபெறும். இந்தாண்டு பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த முடிவு செய்துள்ளது.

தொடக்கப்பள்ளி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் பிப்ரவரி 18-ல் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளையும் (பிப். 27), நாளை மறுநாளும் (பிப். 28) பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.

பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தினால் பணியிட மாறுதல் பெறும் ஆசிரியர்களின் உரிமை பாதிக்கப்படும்.

எனவே, பதவி உயர்வு கலந்தாய்வு மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பத் தடை விதிக்க வேண்டும். பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கு பிறகே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் தொடக்கக் கல்வி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை மார்ச் 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


JOIN KALVICHUDAR CHANNEL