நான் அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் - சசிகலா.
*நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடுவேன்.
*ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன் - சசிகலா.
*ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் சகோதரியாக இருந்தேன், ஜெயலலிதா மறைந்த பிறகும் அப்படியே இருப்பேன்.
*ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்.
*நம் பொது எதிரி திமுக ஆட்சியில் அமர விடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும்.
*என் மீது அன்பும் அக்கரையும் காட்டியே ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்களுக்கும் நன்றி- சசிகலா.